1908 ஆகஸ்ட் 11 அன்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்க ளால் தூக்கிலிடப்பட்ட குதிராம் குறித்து மறுநாள் வெளியான அமிர்தபஜார் பத்திரிகை “குதிராமின் மரணம்: உற்சாகமாகவும் புன்முறுவல் பூத்துக் கொண்டும் மரணத்தைத் தழு வினார்: அமைதியான இறுதிச் சடங்கு” என கொட்டை எழுத்துக்களில் வெளி யிட்டது. 1902இல் காலனிய எதேச்சதிகாரத்தை ஆயுதந் தாங்கிய நடவடிக்கைகள் மூலம் அகற்ற உறுதி பூண்டிருந்த யுகாந்தார் இயக்கத்தில் இணைந்தார் குதிராம் போஸ். 1905இல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே வங்கப் பிரிவினைக்கு எதிரான இயக்கத்தில் தீவிரப் பங்கேற்றார். 1906இல் குதிராம் மிதுனாப்பூர் சிறை மைதானத்தில் சத்யன் போஸ் எழுதிய ‘சோனார் பெங்கால்’ என்ற புரட்சிப் பிரசுரத்தை வினியோகித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். ஆனால் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிவிட்டார். 1906, மே 16 அன்று மேலும் ஒரு ராஜ துரோ கத்துக்காக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரது இளம் வயதைக் கணக்கில் கொண்டு விரைவில் விடுவிக்கப்பட்டார். காட்டுமிராண்டித்தனமான தீர்ப்புகளுக்குப் பெயர் போன கல்கத்தா நீதிபதி கிங்ஸ்போர்டுக்கு மரண தண்ட னையை நிறைவேற்றும் பொறுப்பை குதிராம் மற்றும் பிரபுல்ல சம்கியிடம் ஒப்படைத்தது யுகாந்தர் அமைப்பு. ஏப்ரல் 13, 1908 அன்று மாலை இருளில் பிரபுல்லாவும், குதிராமும் கிங்ஸ்போர்டின் இரட்டை குதிரை வண்டி யின்மீது குண்டு வீசினர். ஆனால் அதில் அவர் பயணம் செய்யவில்லை. போலீஸ் விரட்டியதில் பிரபுல்ல சம்கி அன்றிரவே தாமே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். குதிராம் வெய்னி ரயில்வே ஸ்டேசனில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை பெற்று ஆகஸ்ட் 11 இல் தூக்கிலிடப்பட்டார்.