தஞ்சாவூர், ஆக.26 - தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஒன்றியம், நடுக்கடையில் இளம் கம்யூனிஸ்ட்களின், மாநில பயிலரங்கம் கடந்த ஆக.23 அன்று துவங்கி ஆக.26 இல் நிறைவு பெற்றது. இதில், பல்வேறு தலைப்புகளில் அரசியல் தத்துவார்த்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. பயிற்சி முகாமை மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் பேசினார். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். 4 நாட்கள் நடந்த வகுப்புகளில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், கே.பாலபாரதி, கே.சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.சுவாமிநாதன், சிசுபாலன், மாநில கல்விக் குழு உறுப்பினர் அன்வர் உசேன் உள்ளிட்டோர் பேசினர். திருவையாறு ஒன்றியச் செயலாளர் ஆ.ராஜா நன்றி கூறினார். நிறைவு நாளில், பயிலரங்கம் நடைபெற்ற ஜமாத் திருமண மண்டபத்தின் வாயிலில், பயிலரங்கம் நினைவாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மரக்கன்று நட்டு வைத்தார்.