ISO 9001:2015 - த(ர்)ர சர்டிபிகேட்டா? வாங்குற சர்டிபிகேட்டா? சில தினங்களு க்கு முன்பு தமிழ் நாடு பாஜகவின் எம்எல்ஏ திரு. வானதி ஸ்ரீனிவா சன் அவர்கள் தனது சட்ட மன்ற உறுப்பினர் அலு வலகத்திற்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் கிடைத்து விட்டதாகவும் தமிழகத்தி லேயே அதுதான் முதல் என்றும்கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். நிற்க... அந்த சர்டிபிகேட் எவ்வளவு தரமானது என்பதை இப்போது பார்க்கலாம்... மதுரை நகரத்தின் ஊடாக பாயும் வைகையின் கிளை நதியான கிருதுமால் நதி சாக்கடை நதியாகவே இப்போ தும் இருக்கிறது. இதை சுத்தப்படுத்த வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மதுரை மாவட்டக் குழு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது. இயக்கங்க ளையும் நடத்தியுள்ளது. ஆனால், இப்போதும் சாக்கடை கழிவுகள் கலக்கும் இடமாகவே இருந்து வருகிறது. அந்த நதிக்கு ISO 9001:2015 தரச் சான்று வேண்டு மெனக் கோரி மதுரையைச் சார்ந்த ஆர்.எம். பாபு என்ப வர் விண்ணப்பிக்க 5000 கொடு, 3000 கொடு என்று கேட்டு, இறுதியாக 1000 ரூபாய் வாங்கிக் கொண்டு ‘கிருது மால் சாக்கடை நதி’ என்கிற பெயரில் சர்டிபிகேட் வழங்கி யிருக்கிறது. அந்த நிறுவனம். பாராட்டப்பட வேண்டிய விச யம் என்னவென்றால் அவர்கள் கறாராக 180 ரூபாய் ஜிஎஸ்டி வசூலித்து விட்டார்கள். அவ்வளவு தேசபக்தி. அந்த நிறுவனம் திரு. வானதி ஸ்ரீனிவாசன் அவர்க ளின் அலுவலகத்திற்கு தரச் சான்று வழங்கிய அதே QR என்கிற Quality Research Organisation நிறுவ னம்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தச் சாக்கடையை குடிநீர் என்று தரச் சான்று வழங்கியிருப்பது தான். சாக்கடைக்கு குடிநீர் என்று தரச்சான்று கொடுத்த வர்கள்தான் திரு. வானதி ஸ்ரீனிவாசன் அவர்களின் சட்டமன்ற அலுவலகத்திற்கு சிறந்த சட்டமன்ற அலுவல கம் என்று சான்று வழங்கியிருக்கிறார்கள். இப்போது திரு. வானதி ஸ்ரீனிவாசனும் பாஜகவும் அந்த சர்டிபி கேட்டை அலுவலகத்தில் மாட்டி வைப்பார்களா? கிருதுமால் நதியில் வீசிவிடுவார்களா என்பதுதான் சாதாரணமான கேள்வி.