tamilnadu

img

‘கலைஞர் எழுதுகோல்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை,  ஜூலை   3- ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழறி ஞர் கலைஞரின் பிறந்த தினமான ஜூன் 3 ஆம் நாளன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கவுரவிக்க ஆணை வெளியிடப்பட்டு, 2022 ஆம் ஆண்டுக்கான “கலைஞர்  எழுதுகோல் விருது” வழங்க நாளிதழ் களில் செய்தி வெளியிடப்பட்டு தகுதி யான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இந்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெண்மையைப் போற்று கின்ற வகையில் சிறப்பினமாக இவ்வாண்டு மட்டும் ஒரு பெண் இதழி யலாளருக்கு கூடுதலாக ஒரு “கலைஞர்  எழுதுகோல் விருது” வழங்கி கவுரவிக்க அரசு முடிவு செய்துள்ளது.  அந்த வகையில், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெண்மையைப் போற்று கின்ற வகையில் சிறப்பினமாக ஒரு  பெண் இதழியலாளருக்கு “கலைஞர்  எழுதுகோல் விருது” வழங்க விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.  மேலும் கலைஞர் எழுதுகோல் விருது 2022 ஆம் ஆண்டிற்கான ஏற்கெனவே பெறப்பட்டுள்ள

விண்ணப் பங்களுடன், கூடுதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கலைஞர் எழுதுகோல் விருதானது, ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச்  சான்றிதழும் அடங்கும். விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தமிழ் இதழியல் துறையில் குறைந்த பட்சம் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து  பணிபுரிகின்றவராகவும் இருக்க வேண்டும். பத்திரிகைப் பணி முழுநேரப்  பணியாகக் கொண்டிருக்க வேண்டும்.  இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காக வும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காக, பெண்கள்  முன்னேற்றத்திற்காகவும், பங்காற்றி இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையில் பணிபுரியும் நிறுவனத் தின் பரிந்துரையின் பேரில் விண்ணப் பங்களை அனுப்பலாம். இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது. “கலைஞர் எழுதுகோல் விருது 2022” மற்றும் பெண்மையைப் போற்றுகின்ற வகையில் சிறப்பினமாக கூடுதலாக ஒரு பெண் இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” ஆகிய வற்றிற்கான தகுதியான விண்ணப் பங்கள், விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்கு உரிய ஆவணங்க ளுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு 31.7.2023 க்குள்ளாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று  தெரிவித்துள்ளனர்.