சேலம், மார்ச் 25- சேலம் அரசு மருத்துவமனையில், உலக காச நோய் தினம் வியாழனன்று அனுசரிக்கப்பட்டது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட காசநோய் மையம் சார்பில் உலக காசநோய் தினம் அனுசரிக் கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதார துணை இயக்குனர் கணபதி தலைமை வகித்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, காசநோய் காற்றின் மூலம் பரவக் கூடியது. 2 வாரத்திற்கு மேல் இருமல், சளி, காய்ச்சல், பசியின்மை, எடை குறைவு மற்றும் நெஞ்சு வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் காசநோய் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனை சளிப்பரிசோதனை மூலம் கண்டறியலாம். சில சமயங்களில் அறிகுறிகள் இல் லாத போது எக்ஸ்ரே பரிசோதனை மூலமும் நோய் கண்டறிய வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என விழிப் புணர்வு ஏற்பட்டுத்தப்பட்டது. முன்னதாக, ஜெனிஸ் அகாடமி நிர்வாகி கர்லின் எபி மற்றும் அவரது குழு வினர் கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.