tamilnadu

img

சென்னையில் அணிதிரண்ட விவசாயிகள் - தொழிலாளர்கள் நாடு தழுவிய மகா முற்றுகை இயக்கம் துவங்கியது!

சென்னை, நவ. 26 - மோடி அரசு வீழ்வதே,  இந்திய மக்கள் வாழ்வதற் கான ஒரே வழி என்ற முழக் கத்தை முன்வைத்து, அனை த்து மத்திய தொழிற்சங்கங் கள் மற்றும் ஐக்கிய விவ சாயிகள் முன்னணி நடத்தும் 2 நாள் பெருந்திரள் தொடர் அமர்வு சென்னையில் ஞாயிறன்று துவங்கியது. ஆயிரக்கணக்கான விவ சாயிகள் - தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக  அரசுக்கு எதிராக கண்டனம் முழங்கினர். தாங்கள் துவங்கியுள்ள இந்தப் போராட்டம், மோடி அரசை வீழ்த்தாமல் ஓயாது என்றும் அறிவித்தனர். ஒன்றிய ஆட்சிப் பொறுப் பேற்றதில் இருந்து, கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகள் - தொழிலாளர்களுக்கு, பாஜக தலைமையிலான மோடி அரசு தொடர்ந்து துரோ கம் இழைத்து வருகிறது. பிர தமர் மோடி கொண்டு வந்த மூன்று கருப்பு சட்டங்களை யும் எதிர்த்து தில்லியில் ஓராண்டிற்கும் மேல் விவ சாயிகள் போராட்டம் நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து அந்த மூன்று சட்டங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்ட பாஜக அரசு, அனைத்து விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டு சட்ட மாக்கப்படும், விவசாயி களின் அனைத்துக் கடன் களும் தள்ளுபடி செய்யப்  படும் என எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொண்டது. ஆனால், அதனை நிறை வேற்றவில்லை. ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை இதுவரை அமல்படுத்தா மல், விவசாயிகள் முதுகில் குத்தி துரோகம் செய்துள்ளது.

மறுபக்கத்தில், நாடு முழு வதும் உள்ள தொழிலாளர் கள், இதுநாள் வரை போ ராடிப் பெற்ற பல்வேறு தொழி லாளர் நலச் சட்டங்களை தக ர்த்து வருகிறது. நவீன பொரு ளாதாரக் கொள்கைகளால் விவசாயிகள், தொழிலாளர் கள் கடுமையாக சுரண்டப் படுகின்றனர்.  பெருமுதலாளிகள், கார்ப் பரேட்களை ஊக்குவிக்கும்  வகையில் பொதுத்துறை களை தனியார் மயமாக்கு கின்றனர். தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளி களுக்கு சாதகமாக திருத்தி உள்ளனர். இவ்வாறு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து, கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை லாபம் அடை யும் வகையிலும், அனைத்து அரசுத்துறை நிறுவனங் களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக் கைகளைக் கண்டித்தும் நவம்பர் 26, 27, 28 தேதிகளில் நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை முன்பு தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்துவதென விவசாயிகள் சங்கங்கள் மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் அறி வித்தன.

இதனொரு பகுதி யாக, 11 மத்திய தொழிற் சங்கங்கள், மாநில தொழிற் சங்கங்கள், சம்மேளனங் கள், ஐக்கிய விவசாயிகள் முன் னணி ஆகிய அமைப்புகள் இணைந்து நவம்பர் 26, 27 தேதிகளில் தமிழ்நாட்டிலும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. அதனடிப்படையில், சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே ஞாயிறன்று பெருந் திரள் அமர்வு போராட்டம் தொடங்கியது. 27 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி நடை பெறும் இந்த போராட்டத்தை தொமுச பொதுச்செயலா ளர் மு. சண்முகம் எம்.பி.  துவக்கி வைத்தார். அகில இந்திய விவசாயிகள் சங்கத் தின் பொதுச்செயலாளர் விஜு கிருஷ்ணன், சிஐடியு  அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே. பத்ம நாபன், மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் மற்றும் காசி விஸ்வநாதன் (ஏஐடி யுசி), ராஜா ஸ்ரீதர் (எச்எம் எஸ்), சேவியர் (ஐஎன்டியுசி) சங்கர் (ஏஐசிசிடியு), சிவக் குமார் (ஏஐடியுயுசி), ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கே. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலை வர்கள் பெ. சண்முகம், சாமி. நடராஜன், எம். சின்னதுரை எம்எல்ஏ உள்ளிட்ட ஏராள மானோர் பேசினர்.