காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
சென்னை, ஜூன். 8- சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வட மாநில தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோட்டா லால் பண்டாரி (22) உள்ளிட்ட தொழிலாளர்கள் அங்கேயே தங்கியிருந்தனர். இந்நிலையில் சோட்டா லால், வெள்ளிக்கிழமை அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் போது தரை உடைக்கும் ட்ரில்லிங் இயந்திரத்திற்கு செல்லும் ஒரு மின்வயரை பிடித்து இழுத்துள்ளார். ஏற்கெனவே சேதமடைந்திருந்த அந்த வயரில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததால், சோட்டா லால் மீது மின்சாரம் பாய்ந்தது. விபத்தில் பலத்த காயமடைந்த சோட்டா லாலை, அங்கிருந்த சக தொழிலாளர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெகா டவுன்ஷிப் திட்டம் ஜி ஸ்கொயர் குழுமம் அறிவிப்பு
கோவை, ஜூன் 7- தென்னிந்தியாவில் முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பரான ஜி ஸ்கொயர் குழுமம், மனைகள் மற்றும் வீடுகள் இணைந்த ஒரு விரிவான டவுன்ஷிப் திட்டத்தை கோவையில் அறிமுகம் செய்துள்ளது. கோவை மலைத் திட்டம், தற்போது ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ் என மறுபெயரிடப்பட்டுள்ளது, 714 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த திட்டத்தில் கட்டம் 1 406 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. மற்றும் 3,127 டிடிசிபி மற்றும் ரேரா அங்கீகரிக்கப்பட்ட பிரீமியம் மனைகளை கொண்டுள்ளது. மீதமுள்ள 308 ஏக்கர், வணிக குத்தகை மற்றும் வணிக பூங்காக்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஒரே கூரையில் பல திரையங்குகள் உள்ளிட்ட நவீன வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு மேம்பாட்டுக்காகவும் பொருத்தமான ஐடி உள்கட்டமைப்பு திட்டங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி ஸ்கொயர் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் பால ராமஜெயம் கூறினார்.
காலி நிலம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு என்ன?
சென்னை, ஜூன் 7- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலி நிலங்கள் வைத்துள்ள நில உரிமையாளர்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. காலிமனை வைத்துள்ள உரிமையாளர்கள் வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் ரூ.25000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அபராதம் விதித்தும் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால் நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரி வித்துள்ளது. காலி மனையில் செடிகள், மண்டுதல், குப்பை கள், மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். காலி நிலத்தில் எல்லையை சுற்றி வலுவான மற்றும் பாதுகாப்பான வேலியை அமைக்க வேண்டும். நிலத்தில் திடக்கழிவு அல்லது கட்டிடக் கழிவுகள் தேங்கியிருப்பதை தவிர்க்க வேண்டும். பொது சுகாதாரத்திற்கு கேடு விளை விக்க காரணமாக இருக்கும் கழிவுகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும். நிலத்தில் அதிகமாக வளர்ந்துள்ள செடிகளை அகற்றி குப்பைகள் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகள்
உரிய ஆவணம் இல்லாத நாட்டுப்படகுகளுக்கு டீசல் மானியம் நிறுத்தப்படும் : ஆட்சியர்
திருவள்ளூர், ஜூன் 7- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் ஜூன் 10 அன்று மீன்பிடிக்க செல்லாமல் தங்களது படகு களை ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். நடப்பாண்டிற்கான (2025-2026) தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டம் 1983 ன் படி, மீன்பிடி தடைகாலத்தில், அனைத்து வகை மீன்பிடி படகுகள் 10.06.2025 அன்று சிறப்பு குழுக்கள் மூலம் நேரடி ஆய்வு செய்யப்பட உள்ளது. அதற்கேற்ப முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து நாட்டுப்படகு உரிமையாளர்கள் மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மீனவ கிராம நிர்வாகிகளை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் போது நாட்டுப்படகு உரிமையாளர்களின் ஆதார் அட்டை, படகு பதிவு சான்றிதழ், டீசல் மானிய அட்டை, குடும்ப அட்டை மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள், உயிர்காப்பு கவச உடைகள் ஆகியவை ஆய்வுக்குழு வசம் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்., மேலும் தங்களது மீன்பிடி படகுகளை (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை), இயந்திரம் பொருத்தியது மற்றும் இயந்திரம் இல்லாத நாட்டுப்படகுகளை தவறாது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆய்விற்கு உரிய ஆவ ணங்களுடன் உட்படுத்தப்படாத நாட்டுப்பட கிற்கு மானிய டீசல் உடனடியாக நிறுத்தப் படும், மேலும் படகின் பதிவை ரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
அம்பத்தூரில் இன்று மின்தடை அம்பத்தூர்,
ஜூன் 7- அம்பத்தூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பத்தூர் 6ஆவது தெரு, ரயில் நிலைய சாலை, காமராஜர் நகர், மகாத்மா காந்தி 1 முதல் 9ஆவது தெரு வரை, 3ஆவது பிரதான சாலை, தண்ணீர் தொட்டி அருகில், தெற்கு கட்டம் 6 முதல் 9ஆவது தெற்கு கட்டம், 3ஆவது குறுக்கு தெரு, 2ஆவது பிரதான சாலை, 2ஆவது குறுக்கு தெரு, 9 முதல் 11ஆவது குறுக்கு தெரு, பிரிவு 1 தெற்கு கட்டம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 2 மணிக்குள் பரா மரிப்பு பணி முடிவடைந்த வுடன் மின்விநியோகம் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.