tamilnadu

img

கலை நயத்துடன் உருவாகும் கீழடி அருங்காட்சியகம்

மதுரை,பிப்.11- கீழடி அகழ்வைப்பக கட்டுமா னப் பணி 100 சதவீதம் முடிவடைந்து விட்டது. இந்தக் கட்டுமானப் பணியும் கூட கலை நுணுக்கத்துடன் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கீழடி வரலாற்றைக் காட்சிப்படுத்தும் ஒளி-ஒலி அரங்கம் தயார் நிலையில் உள்ளது. இதை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி சனிக்கிழமை பார்வையிட்டார்.  தவிர அகழாய்வுக்குழிகள், கீழடியில் இருந்த பழங்காலக் கட்டுமானம் ஆகியவற்றை அப்ப டியே பெயர்த்தெடுத்து வந்து காட்சிப்படுத்த முடியாது. எனவே இவற்றை புகைப்படம் எடுத்து வந்து தத்ரூபமாக வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. “டெர கோட்டா” பொம்மைகளை காட்சிப் படுத்துவதற்கென்ற சிறப்பு வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது.  தவிர கீழடி, கொந்தகையில் கண்டறியப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கீழடி அகழ் வைப்பகம் கடல் வணிகம், நகர நாகரீகம் ஆறு பிரிவுகளாக வகைப் படுத்தப்பட்டுள்ளது.

கீழடி கட்டடப்பணி வேகமாக நடைபெற்று வர்ணங்கள் பூசப்பட்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. கட்டடப் பணியின் தொழில் நுட் பத்தை விட இங்கு காட்சிப்படுத் தப் போகும்பொருட்களையும் நுட்பமாக வடிவமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. வரலாற்று ஆய்வாளர்கள், அமைச்சர்கள் வந்து பார்வையிட்டுச் சென்றபோது ஒவ்வொருவரும் அற்புதமான ஆலோசனைகளையே வழங்கியி ருக்கின்றனர். அதை செயல் படுத்தும் போது “டெக்னிக்கல்” பிரச்சனைகள் எழுந்துள்ளன என்பதே உண்மை. சனிக்கிழமையன்று சிவகங்கை ஆட்சியர் மேகநாதரெட்டி ஒவ்வொரு பகுதியாகச் சென்று கடந்தவாரம் நடைபெற்ற பணியை ஆய்வு செய்து  குறிப்பிட்ட இந்தப் பணி ஏன் தாமதமாகிறது எனக் கேட்டறிந்தார். சில பகுதிகளை சுட்டிக்காட்டி இங்குள்ள “சுவர்க ளை” முழுமையாகப் பயன்படுத் துங்கள். அவற்றில் எந்தெந்த பொருட்களை காட்சிப்படுத்த முடியும் என்பதை சக அதிகாரிக ளோடு ஆலோசனை செய்து முடி வெடுங்கள். மக்கள் ஒரு இடத்திற்கு வந்தவுடன் அவர்கள் உடனடியாக கடந்து சென்று விடக்கூடாது. ஈர்க்கப்படவேண்டும் என்றார்.

மூன்று முதுமக்கள் தாழிகள் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன. இதை எப்படி காட்சிப்படுத்தப் போகிறீர்கள் எனக் கேட்டதற்கு அதிகாரிகள், “ முதுமக்கள் தாழி களை சுவரின் ஒரத்தில் காட்சிப் படுத்தி” அதை யாரும் தொட்டுப் பார்க்காத வகையில் ஆறடி உய ரத்திற்கு கண்ணாடி வைக்கப்படும் என்றனர். இப்படி ஒவ்வொரு அறை யிலும் காட்சிப்படுத்தப் போகிற பொருட்கள் குறித்து விளக்கினர். அங்குள்ள ஊழியர்கள் சிலரிடம் பேசிய போது,  சாதாரண விஷ யங்கள் கூட “சென்சிடிவ் பிரச்ச னைகளாக” சித்தரிக்கப்படுகிறது. “வரலாறை வரலாறாகச் சொல்ல வேண்டுமென்பது தான் நோக்கம்” அதில் சின்னச் சின்ன மாற்று ஆலோசனைகள், கருத்துக்கள் வந்தால் அதையும் நாங்கள் உள்வாங்கிப் பணியாற்றுகிறோம்” என்றனர். ஆய்வை முடித்து புறப்பட்ட ஆட்சியரிடம்,  சார் எப்போது பணிகள் நிறைவடையும் எனக் கேட்டதற்கு, பிப்ரவரி இறுதிக் குள் நிறைவடைந்துவிடும். விரை வில் திறப்பதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றார். கீழடி அகழ்வைப்பகம் திறந்த பின் போய் அதைப் பார்ப்பது இருக்கட்டும்... வாய்ப்புள்ள வர்கள் இப்போது போய் பாருங்கள் அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு களை நம் கண் முன் நிறுத்த முயலும் உழைப்பாளிகளின் பங்களிப்பை. ச.நல்லேந்திரன், ஜெ.பொன்மாறன்