tamilnadu

தீயணைப்பு பணிகளில் பெண்கள்: அரசு பரிசீலனை

சென்னை, மார்ச் 20 - தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில்  தீயணைப்பு வீராங்கனைகள் சேர்ப்பது குறித்து தமிழ்நாடு அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குநர் பிரஜ்கிஷோர் ரவி  தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்," தீயமை ப்புத்துறை அதிகாரி பிரிவில் 22 பெண்கள் உள்ளனர். ஆனால் தீயணைப்பு பணி யாளர்களாக பெண்கள் இல்லை. தீயை அணைக் கும் பணியில் பெண் களை ஈடுபடுத்த திட்ட மிட்டுள்ளோம். இதுகுறித்த முன்மொழிவு அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது. அரசு விரைவில் இது தொடர்பான முடிவை எடுக்கும்" என்றார். தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தாம்பரம் அருகே புதிய அகாடமி அமைக்கப்பட உள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங் கும். மாநில பேரிடர் மீட்பு  பணியில் நிரந்தர பணியா ளர்கள் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு ள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் பயிற்சி பெறும் காவலர்கள் வேறு பணிகளுக்கு செல்வதால் அவர்களின் பயிற்சி வீணாகிவிட்டது என்றும் அவர் கூறினார்.