“சர்தார் உத்தம்” பெயரை கேட்டதுமே , 21 ஆண்டுகள் விடுதலை கனலை நெஞ்சில் ஏந்தி, பஞ்சாப் ,அமிர்தசரஸில் ரவ்லட் சட்டத்தை எதிர்த்து, அமைதியான முறையில் ஜாலியன் வாலாபாக்கில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற 20,000 அப்பாவி மக்களை, குறிப்பாய் பெண்கள் குழந்தைகள் என பாராமல் குண்டு மழைகள் பொழிந்து,கொன்று குவித்த ,ஜெனரல் டயர் ( General Dwyer என்னும் பிரிட்டிஷ் அதிகாரியை )அவன் ஊரிலேயே (லண்டன்) பழி தீர்த்த வீரர் என்பது அனைவரும் அறிந்ததே.
படத்தின் கால அளவு 2மணி 42 நிமி டங்கள். ஒவ்வொரு காட்சியிலும் மனம் கனத்துப் போகிறது.தொடர்ந்து பார்க்க முடியவில்லை. நிதானித்து, ஆசு வாசப்படுத்தி, கொஞ்ச நேரம் கழித்தே பார்க்க முடிந்தது. அதிலும் 13 ஏப்ரல் 1919 அன்று ஜாலி யன்வாலாபாக்கில் பிரிட்டிஷ் காவல் துறை யால் நடக்கும் கொடூரமான படுகொலைக் காட்சி திரையில் ஓடுகிறது. நம்மையும் அறி யாமல் கண்களிலிருந்து கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை. இந்திய விடுதலைப் போரின் ஒரு சம்ப வத்தின், சிறு பகுதியே இவ்வளவு கர்ண கொடூரமாய் இருந்ததென்றால், இந்திய விடுதலைக்காய் நூற்றாண்டுகளை கடந்து, நடந்த போராட்டங்கள் எவ்வளவு வலி மிகுந்ததாய் இருக்கும் என்று யூகிக்க முடிகிறது. அந்த படுகொலையை நடத்திய ஜென ரல் டயர் வீட்டில் பணியாளாய் சேர்வார் “உத்தம்”. ஒரு சமயம் இது குறித்து பேசும் போது “தனக்கு இச்சம்பவத்தை நடத்திய தற்கு ஒரு சிறு குற்ற உணர்வு கூட இல்லை” என்று கூறுவான் டயர். மேலும் தனது மேலதிகாரியிடம் ஒரு முறை கூறும் போது, பஞ்சாபில் ஐந்து நதி கள். ஆறாம் நதியாய் ரத்த ஆறு உரு வாக்கினேன் என்று பெருமையாய்க் கூறு வான். “மக்களுக்கு பயம் வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை இது” என்றும் கூறுவான். உத்தம் “அந்தச் சம்பவம் நடந்த இடத் திற்குச் சென்று பல உயிர்களை காப்பாற்று வான். பலர் கை, கால்கள் அடிபட்டு அலறித் துடிப்பார்கள்.” குண்டுகள் மலையாய் சிதறிக் கிடக்கும்.
டயரைக் கொள்வதற்காக பலமுறை பல்வேறு பெயர்களில் பாஸ்போர்ட் எடுத்து பல வேலைகள் செய்து அங்குள்ள பல பேரின் உதவிகளைப் பெற்று 21 வருடம் காத்திருந்து, சரியான நேரம் பார்த்து, ஒரு கூட்டத்தில் பேசி முடிக்கும் போது பல பேரின் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வார். தப்பித்து ஓட முயற்சி செய்ய மாட்டார். (பகத்சிங் நாடாளு மன்ற கட்டிடத்தில் குண்டுகள் போட்டு தப்பிக்க முயற்சிக்காமல் இருந்ததைப் போலவே). அவரை கைது செய்து விசாரிக்க, அவருடைய பெயரை கண்டுபிடிக்கவே சிர மப்படுவார்கள் காவல்துறையினர். பல சித்தி ரவதைகள் செய்வார்கள். ஆனாலும் அவர் பெயரை சொல்ல மாட்டார். HSRA இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடிய ரசு சங்கம் ( Hindustan Socialist Republic Association) என அமைப்பின் பெயரை பச்சை குத்தி இருப்பார். அதைத் தான் தன்னு டைய பெயர் என்று காட்டுவார். கோர்ட்டில் ஆஜர்படுத்தும் போது, “கொலை செய்தாய்” என குற்றம் சாட்டும் போது, நான் ஒரு “விடுதலைப்போராட்ட வீரர், எங்கள் நாட்டை விட்டு வெளி யேறுங்கள்” என்று கர்ஜிப்பார். இறுதியாய் தூக்குத் தண்டனை நிறை வேற்றப்படும் என அறிவித்தவுடன், “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக! இன் குலாப் ஜிந்தாபாத் “ என்று முழக்கமிடு வார். இறுதியாய், மன்னிப்புக் கேட்டால் வாழ லாம் என்று கூறுவார்கள். “முடியாது,நான் என் நண்பனிடம் (பகத்சிங்)செல்கிறேன்”.
ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் “நான் ஒரு புரட்சியாளன்” என்று சொல்லுங் கள் என்று கூறுவார். 31 ஜூலை 1940 ஆம் ஆண்டு லண்ட னில் தூக்கிலிடப்படுவார் சர்தார் உத்தம். அவரின் இறுகிய கைகளில், ஒரு துண்டு காகிதம் இருக்கும். அதை விரித்துப் பார்த் தால் அதில் “பகத்சிங்கின் படம்” இருக் கும். இடை இடையில் அவரின் காதலும் காத லியும் நினைவுக்கு வருவார்கள். அழகாய் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அவரால் பேச முடியாது. அவரும் ஜாலியன்வாலா பாக்கில் படுகொலை செய்யப்படுவார். புரட்சியாளர்களின் காதல் ,பாறையின் இடுக்கில் பூக்கும் மலர் போல அழகாய் இருக்கும். படத்தின் இயக்குனர் சூஜித் சிர்கார். பல்வேறு படங்களில் இச்சம்பவம் எடுக்கப் பட்டு இருக்கிறது. ஆனால் இதுபோல் விரி வாய் யாரும் எடுத்ததில்லை. இயக்குநர் மிகுந்த பாராட்டுக்குரியவர். இச்சம்பவத்திற்காக நூறு ஆண்டுகள் கழித்து பிரிட்டிஷ் அரசு மன்னிப்புக் கேட்டது. 1899 இல் பிறந்து 1940 இல் 41 வயதில், தன் நாட்டின் விடுதலைக்காய், தூக்கு மேடை ஏறினார் சர்தார் உத்தம். நாம் வாழும் இந்த சுதந்திரமான வாழ்க்கைக்குப் பின்னால் ஏராளமான மக்கள், தலைவர்கள், புரட்சியாளர்களின் உயிர்த் தியாகம் உள்ளது என்பதை இந்த தலைமுறை அவசியம் அறிய வேண்டும். 2021 இல் வெளி வந்த இந்த திரைப் படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் உள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படை யாக கொண்டது.