tamilnadu

விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத் தொகை

விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத் தொகை உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜூன் 11 - தமிழகத்தில் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் புதன்கிழமை (ஜூன் 11) நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின்  செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார். அப்போது, “சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ‘மணிமேகலை விருது’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த வாரமே நடைபெற வேண்டியது. எனக்கு உடல்நிலை சரியில்லாததால் இந்த வாரம் நடத்தப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டிருந்தன. அதற்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இன்று மட்டும் ரூ. 3,120 கோடி  வங்கிக்கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார். “விடுபட்ட மகளிருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என முதல்வர் சட்டப்பேரவையில் அறி வித்தார். அதற்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பிக் கப்பட்டுள்ளன. விரைவில் அறிவிப்பு வெளியாகும். தேதி  அறிவிக்கப்படும். சென்றமுறை எப்படி சரியாக வழங்கப் பட்டதோ அதேபோல் இந்த முறையும், விடுபட்டவர்களுக்கு நிச்சயமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்” என்று  உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.