tamilnadu

img

மகளிர் உரிமைத் தொகை திட்டம் இலக்கைத் தாண்டி இமாலய வெற்றி

மகளிர் உரிமைத் திட்ட இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கு வங்கி பணப் பரிமாற்ற அட்டையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அமைச்சர்கள்  உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, மேயர் பிரியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, நவ.10- தமிழ்நாட்டில் குடும்பத் தலைவி களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கடந்த செப்டம்பர் 15 அன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரு கிறது. இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் ரூ. 1000 விகிதம் கடந்த 3 மாதமாக அவ ரவர் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.  இந்த திட்டத்தில் விண்ணப்பித்து, பல்வேறு காரணங்களால் மனு நிரா கரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலை யில், 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மீண்  டும் மனு அளித்தனர். இந்த 2-ஆம் கட்ட  வாய்ப்பில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர்  தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ரூ. 1000 வழங்கும்  பணியை, வெள்ளியன்று சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் 6 பயனாளிகளுக்கு வங்கி  பற்று அட்டையை வழங்கி முதல்வர்  மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.  

அப்போது அவர் பேசியதாவது:  “கடந்த சில நாள்களாக காய்ச்சல், தொண்டை வலி இருந்தது. காய்ச்சல் குறைந்தாலும் தொண்டை வலி மட்டும் போகவில்லை. அதனால் இந்த வாரம் முழுவதும் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும், என்னால் மக்களை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதனால் உங்களை சந்திக்க வந்துள்ளேன். தொண்டையில் வலியிருந்தாலும், தொண்டில் தொய்வு இருக்கக் கூடாது.  மகளிர் உரிமைத் திட்ட வாக்குறு தியை திமுக அரசால் நிறைவேற்ற  முடியாது எனக் கூறினார்கள். வாக்குறு தியை நிறைவேற்றியுள்ளோம். வங்கிக் கணக்கு தொடங்காதவர்களுக்கு மணி ஆர்டர் மூலமாக ரூ. 1,000  வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரி மைத் திட்டம் எந்த சின்ன புகாருக்கும் இடமின்றி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. பாரபட்சமின்றி தகுதியான அனைவருக்கும் வழங்கப்பட்டு வரு கிறது. மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்துகாட்டி வெற்றி பெற்றுள்ளோம். இது, ஊர் கூடி ‘இழுத்த தேர்!’  ஊருக்காக திமுக அரசு, ‘உருவாக்கிய தேர்!’’மக்களின் தேர்’ இது. தேசிய ஊடகங்களும், பிற மாநில அரசுகளும்  கூட இந்த திட்டமிடல், நிர்வாக நடை முறை வியந்து பார்க்கிறார்கள். அந்த  வகையில், இந்தத் திட்டம் இவ்வளவு  பெரிய இமாலய வெற்றிபெற்றுள்ளது. ஒரு கோடி பேருக்கு உரிமைத் தொகை தரப்படும் என்று கூறிய நிலை யில் தற்போது 1 கோடியே 13 லட்சம்  பேருக்கு வழங்கப்படுகிறது.மேல்முறை  யீடு செய்தவர்களின் விண்ணப்பங்  களை பரிசீலனை செய்யும் பணி  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள  ஆய்வுக்கு பின், மேலும் தகுதியான மக ளிருக்கு டிசம்பர் மாதம் முதல் உரி மைத் தொகை வழங்கப்படும்” என தெரிவித்தார்.