அறந்தாங்கி அரசு கல்லூரியில் மகளிர் தின விழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரியில், உலக மகளிர் தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை தலைமை வகித்தார். கல்லூரிக் கணினி அறி வியல் துறைத் தலைவரும், இணைப் பேரா சிரியருமான முனைவர் து.சண்முகசுந்தரம் வாழ்த்தி பேசினார். கல்லூரி அனைத்துத் துறைத் தலை வர்கள், பெண் விரிவுரையாளர்கள், கல்லூரிக் கண்காணிப்பாளர் இரா.கலைச்செல்வி, மாணவியர் பங்கேற்றனர். மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. முன்னதாகக் கல்லூரி ஆங்கிலத் துறை கவுரவ விரிவுரையாளரும், விழா ஒருங்கி ணைப்பாளருமான முனைவர் இரா.அபி ராமி வரவேற்றார். தமிழ் துறை விரிவுரை யாளர் இரா.ராஜலெட்சுமி தொகுத்து வழங்கி னார். கணிதவியல் துறைத் தலைவரும், விழா இணை ஒருங்கிணைப்பாளருமான முனை வர் பா.கிளாடிஸ் நன்றி கூறினார்.