பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை பெற்ற மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் பேசுகையில், கியூபாவிற்கு அரிசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அனுப்பும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றபோது, அதில் சிவாஜி கணேசன், என்.ராம் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலும் தனியாவர்த்தனம் வாசித்தேன். இப்போது சேகுவேரா மகள் வரவேற்பு நிகழ்ச்சியில் வாசிப்பதிலும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது வாசித்ததை அலெய்டா குவேராவிற்கு சமர்ப்பிக்கிறேன். அதுபோல் உலகில் இருந்து எந்த பிரமுகர்கள் வந்தாலும் நான் வாசிக்கத் தயாராக உள்ளேன். நான் இப்போது வாசிக்கும் போது எனக்கு உதவியாக தாளம் போடுவது திருவனந்தபுரத்தில் இருந்து ஹரிஹரன் வருகை தந்துள்ளார். என்னுடன் 25 ஆண்டுகளாக பயணிக்கும் ஜான்சனை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளேன். நான் இல்லாமல் அவரில்லை, அவரில்லாமல் நான் இல்லை என்றார்.
கி.ரமேஷ்
புத்தகம் ஒரு ஆயுதம், பேனா துப்பாக் கியை விட வலிமையானது என்றெல் லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த வாக்கியத்தின் உண்மையை நான் நேரில் அனுபவித்தேன். புதன்கிழமை மாலை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் புரட்சியாளர் சே குவேராவின் மகள் அலெய்டா குவேராவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வில் மூத்த மிருதங்க இசைக்கலைஞர் மாமேதை உமையாள்புரம் சிவராமன் கலந்து கொண்டிருந்தார். அவர் கியூபா ஒருமைப் பாட்டுக் குழுவுடன் நீண்ட காலமாகத் தொடர் பில் இருப்பவர். முன்பு 2007 கியூப ஒருமைப் பாட்டு மாநாட்டிலும் கலந்து கொண்டு தனி ஆவர்த்தனம் வாசித்தவர். இன்றும் அவரது தனி ஆவர்த்தனத்தைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. விஷயம் அதுவல்ல. மேடையில் வாசிப்பதற்காக வந்து அமர்ந்த வர் திடீரென ஒரு காரியத்தைச் செய்தார். “நான் மட்டும் இங்கு வரவில்லை. நான் ஒருவரை இங்கு அழைத்து வந்திருக்கிறேன்” என்றவர், உள்ளேயிருந்து ஒருவரை அழைத்து அறிமுகம் செய்தார். “இவர்தான் ஜான்சன். நான் வாசிக் கும் மிருதங்கங்களைச் செய்யும் கலைஞர் இவர்தான். இவர் இல்லாவிட்டால் நான் இல்லை, நான் இல்லாவிட்டால் இவர் இல்லை” என்று அறிமுகம் செய்தார். மலைத்துப் போனேன். இது வரை இப்படிப்பட்ட நிகழ்வை மேடையில் யாரும் செய்ததாகத் தெரியவில்லையே! முன்னால் பாடுபவர்களின், இசைப்பவர் களின் மேதமையைத்தானே நாம் பாராட்டி யிருக்கிறோம்? பின்னால் இருந்து வேலை செய்பவர்களைப் பாராட்டியிருக்கிறோமா என்று வாய்ப்பாட்டு இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா எழுப்பிய கேள்வி நினைவுக்கு வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் டி.எம். கிருஷ்ணா எழுதிய ‘செபாஸ்டியான் அண்டு சன்ஸ்’ சந்தித்த பிரச்சனைகள் நினைவுக்கு வந்தன. அந்தப் புத்தகத்தில்தான் கிருஷ்ணா இந்தக் கேள்விகளை எழுப்பினார்.
மிருதங்கங்கம் ஒரு தோல் வாத்தியம். அதற்கான தோலைத் தேர்வு செய்வதிலிருந்து, அதை மென்மைப்படுத்தி, சரியான நாதத்தைக் கொண்டு வந்து, சரியாகப் பொருத்துவது வரை மாபெரும் கலை. அதை சாதாரணமாகச் செய்து விட முடியாது. அந்தக் கலைஞனின் முழுமை யான அர்ப்பணிப்பையும், இசை ஞானத்தை யும், உழைப்பையும் கோரும் பெரும் கலை அது. மேலும் ஒவ்வொரு இசைக்கலைஞருக்கும் பிடித்தமான நாதத்தைக் கொண்டு வருவது என்பது தனிக்கலை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாகச் செய்ய வேண்டியிருக் கும். எனவே பெரும் இசைக்கலைஞர்கள் தமக் கெனத் தனியாகவே இந்தக் கலைஞர்களை வைத்திருப்பார்கள். இந்த மாபெரும் இசைக் கலைஞர்களின் மிருதங்கங்களைச் செய்து, அவற்றைப் பராமரித்து, பழுது நீக்கி எப்போதும் மேடையில் அவரது வாசிப்பை மெருகேற்றும், மிளிர வைக்கும் கண்ணுக்குத் தெரியாத கலைஞர்கள் இவர்கள். பெரும்பாலும் இவர் கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் செய்யும் இசைக்கருவி பூஜை அறை யில் நுழைந்தாலும், இவர்களால் நுழைய முடியாது என்ற நிலைதான். இந்த விஷயங்கள் குறித்து பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து டி.எம்.கிருஷ்ணா எழுதிய நூல்தான் செபாஸ்டியன் அண்ட் சன்ஸ். அது பேசிய விஷயத்தை விழுங்க முடியாமல் சிலர் அப்புத்தக வெளியீட்டுக்கே தடை போட முயன்றார்கள். அதைத் தாண்டி அந்தப் புத்தகம் வெளியானது. பின்னர் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் அரவிந்தனின் மொழியாக்கத்தில் வெளியானது. அந்த நிகழ்வில் அவரது புத்த கத்தில் குறிப்பிட்டிருந்த மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில்தான் இந்தப் பின்னணி யில்தான் புதனன்று மாமேதை உமையாள்புரம் சிவராமன் தமது மிருதங்கத்தைச் செய்யும் கலைஞரை மேடையில் அறிமுகப்படுத்தி யதைப் பார்க்கிறேன். முன்பும் அவர் செய்தி ருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. நிச்சயம் அவர் ஜான்சன் மீது அன்பையும் மரியாதையை யும் செலுத்தித்தான் இருப்பார். அதுதான் இச் செயலைச் செய்ய அவருக்குத் தூண்டுதலாக இருந்திருக்கும். எனினும், இந்த நிகழ்வை டி.எம்.கிருஷ்ணா வின் புத்தகத்துடன் இணைத்துப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. அந்தப் புத்தகம் எழுதப்பட்டதன் நோக்கம் நிறைவேறி இருப்பதாகவே நான் கருதுகிறேன். டி.எம். கிருஷ்ணாவின் நோக்கம் வெற்றி பெற்ற தாகவே நான் கருதுகிறேன். ஆம். புத்தகம் வெற்றி பெற்றது. அதை எழுதிய டி.எம்.கிருஷ்ணாவுக்கும், மேடையில் நிகழ்த்திய மாமேதை சிவராமனுக்கும் என் பணிவான வாழ்த்துகள், வணக்கங்கள்.