மதுரை மாநகராட்சி சிபிஎம் வேட்பாளர்கள் 4 பேர் வெற்றி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் 4 பேர் வெற்றிபெற்றனர். 23 ஆவது வார்டில் பதிவான வாக்குகள் 8054. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி. குமரவேல் - 2563 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அதிமுக - 1990 வாக்குகள் பெற்றது. 80 ஆவது வார்டில் பதிவான வாக்குகள் 7411. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி. நாகராஜன் - 2693 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக - 1218 வாக்குகள் பெற்றது. 96 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நா.விஜயா 2514 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக - 2149 வாக்குகள் பெற்றது. 56 ஆவது வார்டில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் வி.ஜென்னியம்மாள் 4773 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பதிவான வாக்குகள் 11,227. அதிமுக வேட்பாளர் முருகேஸ்வரி 2911 வாக்குகள் பெற்றார்.
ஆண்டிபட்டி 17 ஆவது வார்டு
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சி 17 ஆவது வார்டில் சிபிஎம் வேட்பாளர் வி.சின்னன் 355 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார்.மொத்த வாக்குகள் - 951, பதிவானவை -541, வி.சின்னன் (சிபிஎம்) - 355, தனுஷ்கோடி (அதிமுக) - 140, அமுதா (அமமுக) - 13, கணேசன் (மநீம) - 13. மோகன்குமார் (பாஜக) - 20 வாக்குகள் பெற்றனர்.
கன்னிவாடி 1 ஆவது வார்டு
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சி 1 ஆவது வார்டில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் மணிமாலதி வெற்றிபெற்றார். மொத்த வாக்குகள் - 490. மணிமாலதி 239 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அதிமுகவின் விஜயராணி 178 வாக்குகள் பெற்றார்.
கே.கே.பட்டி 12 ஆவது வார்டு
தேனி மாவட்டம், கே.கே.பட்டி பேரூராட்சி 12 ஆவது வார்டில் சிபிஎம் வேட்பாளர் பன்னீர்வேல் 419 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். மொத்த வாக்குகள் - 1198, பதிவானவை - 821. எஸ்.பன்னீர்வேல் (சிபிஎம்) - 419, செல்வம் (அதிமுக) -374. சண்முகம் (பாஜக)- 27 வாக்குகள் பெற்றனர்.
ஸ்ரீராமபுரம் 9ஆவது வார்டு
திண்டுக்கல் மாவட்டம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சி 9 ஆவது வார்டில் சிபிஎம் வேட்பாளர் மாலதி 162 வாக்குள் பெற்று வெற்றிபெற்றார். பதிவான வாக்குகள் - 445. மாலதி (சிபிஎம்) -162 வாக்குகள், மஞ்சுளாதேவி (அதிமுக)- 110 வாக்குகள் பெற்றனர்.
அய்யம்பாளையம் 12 ஆவது வார்டு
திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் பேரூராட்சி 12 ஆவது வார்டில் சிபிஎம் வேட்பாளர் பழநியம்மாள் பிச்சைமணி 342 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். சாந்தி (அதிமுக )- 145 வாக்குகள் பெற்றார் .
இராமநாதபுரம் அபிராமத்தில் சிபிஎம் 2 வார்டுகளில் வெற்றி
இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சி 13 ஆவது வார்டில் சிபிஎம் வேட்பாளர் ரவிக்குமார் 96 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சந்தானம் 60 வாக்குகள் பெற்றார். கீழக்கரை நகர்மன்ற 4-ஆவது வார்டில் சிபிஎம் வேட்பாளர் சூரியகலா 459 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வியை (449) தோற்கடித்தார். 10 வாக்குகள் வித்தியாசத்தில் சூரியகலா வெற்றி பெற்றார்.
பண்ணைப்புரம் 15-ஆவது வார்டு
தேனி மாவட்டம், பண்ணைப்புரம் பேரூராட்சி 15-ஆவது வார்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் எஸ்.சுருளிவேல் 290 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக ராஜா 198 வாக்குகள் பெற்றார். பெரியகுளம் நகராட்சி 13-ஆவது வார்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் எம்.மதன்குமார் 286 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
விருதுநகர் மாவட்டத்தில் 3 நகராட்சி வார்டுகளில் சிபிஎம் வேட்பாளர்கள் வெற்றி
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர் ஆகிய நகராட்சிகளில் தலா ஒரு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அருப்புக்கோட்டை 16 ஆவது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டவேட்பாளர் எஸ்.கே.பாலசுப்பிரமணியன் வெற்றி பெறார். இவர், 116 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் சாத்தூர் நகராட்சி 11 ஆவது வார்டில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எஸ்.தெய்வானை வெற்றி வெற்றி பெற்றார். இவர் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆவார். ‘ஹாட்ரிக் வெற்றி‘ கே.ஜெயக்குமார் விருதுநகர் நகராட்சி 24 ஆவது வார்டில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் கே.ஜெயக்குமார் வெற்றி பெற்றார். இவர், அப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நத்தம் 16 ஆவது வார்டு
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சி 16 ஆவது வார்டில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் விஜயவீரன் 672 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் 260 வாக்குகள் பெற்றார்.
க.புதுப்பட்டி 1 ஆவது வார்டு
தேனி மாவட்டம், க.புதுப்பட்டி பேரூராட்சி 1 ஆவது வார்டில் சிபிஎம் வேட்பாளர் எம்.பிரதிபா 202 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். மொத்த வாக்குகள் - 620, பதிவானவை -434. எம்.பிரதிபா (சிபிஎம்) -202. கண்ணீஸ்வரி (சுயேட்சை) -164, ரேகா (அதிமுக) - 38 வாக்குகள் பெற்றனர்.
திண்டுக்கல்லில் 3 வார்டு
திண்டுக்கல் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட 2 ஆவது வார்டு வேட்பாளார் கே.எஸ்.கணேசன் 986 வாக்குகள் வெற்று வெற்றி பெற்றார். 11 ஆவது வார்டு வேட்பாளர் கே.மாரியம்மாள் 1441 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 35 ஆவது வார்டு வேட்பாளர் எஸ்.ஜோதிபாசு 1256 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பழனி நகராட்சியில் 15 ஆவது வார்டில் சிபிஎம் வேட்பாளர் கே.கந்தசாமி 546 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
கோவை மாநகராட்சி
12 ஆவது வார்டு – வி.இராமமூர்த்தி
13 ஆவது வார்டு – என்.சுமதி
24 ஆவது வார்டு – ஆர்.பூபதி
28 ஆவது வார்டு -கண்ணகி ஜோதிபாசு
காரமடை நகராட்சி
1 ஆவது வார்டு – ரா.பிரியா
அன்னூர் பேரூராட்சி
5 ஆவது வார்டு – மணிகண்டன்
8 ஆவது வார்டு –முகமது முசீர்
சூலூர் பேரூராட்சி
7 ஆவது வார்டு -வேலுச்சாமி
வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி
15 ஆவது வார்டு – சாத்துக்குட்டி
இருகூர் பேரூராட்சி
3 ஆவது வார்டு – ராஜேஸ்வரி சண்முகம்
8 ஆவது வார்டு – ஸ்டாலின்குமார்
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி
1 ஆவது வார்டு – உமாதேவி
நீலகிரி
கூடலூர் நகராட்சி
20 ஆவது வார்டு – லீலா வாசு
நெல்லியாளம் நகராட்சி
6 ஆவது வார்டு- பி.ரமேஷ்
19 ஆவது வார்டு- ஏ.விஜயா
ஓவேலி பேரூராட்சி
15 ஆவது வார்டு – பி.சுஹாரா
தேவர்சோலை பேரூராட்சி
5 ஆவது வார்டு – ஏ.வி.ஜோஸ்
7 ஆவது வார்டு- எச்.நாசர்
தருமபுரி பாப்பாரப்பட்டி பேரூராட்சி
8 ஆவது வார்டு – வே.விசுவநாதன்
ஈரோடு
அந்தியூர் பேரூராட்சி
3 ஆவது வார்டு – கீதாசேகர்
நசியனூர் பேரூராட்சி
14 ஆவது வார்டு - சி.பி. தங்கவேல்
ஆப்பக்கூடல் பேரூராட்சி
14 ஆவது வார்டு - விஜயலட்சுமி
சேலம்
மேச்சேரி பேரூராட்சி
3 ஆவது வார்டு – பழனி,
சங்ககிரி பேரூராட்சி
15 ஆவது வார்டு- என்.மாணிக்கம்,
பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி
7 ஆவது வார்டு -எம்.ராமசாமி
கன்னங்குறிச்சி பேரூராட்சி
13 ஆவது வார்டு - தேவி பழனிச்சாமி
திருப்பூர்
திருமுருகன்பூண்டி நகராட்சி
10 ஆவது வார்டு – சுப்பிரமணி
14 ஆவது வார்டு –தேவராஜன்
22 ஆவது வார்டு –பார்வதி
தளி பேரூராட்சி
16 ஆவது வார்டு –செல்வம்
17 ஆவது வார்டு –வாணிஸ்வரி
திருவேங்கடம் பேரூராட்சி
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சி 6 வது வார்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பில் போட்டியிட்ட எல்.கல்பனா கோமதி 140 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பேரூராட்சி மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட எல் .கல்பனா கோமதி க்கு கட்சியின் மாவட்டக்குழு செயலாளர் உ.முத்துபாண்டியன் வாழ்த்துக்களை தெரிவித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.உச்சிமாகாளி,பி. அசோக்ராஜ். மற்றும் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மாடசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
திருச்சி மாநகராட்சி 35 ஆவது வார்டில் சிபிஎம் வேட்பாளர் சுரேஷ் அமோக வெற்றி
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கோட்டம் 35 ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.சுரேஷ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கஸ்தூரி மரியம்பிச்சையைவிட 2058 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
தா.பேட்டை
திருச்சி புறநகர் மாவட்டம் தா.பேட்டை பேருராட்சி 6 ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்ட சத்யாபாண்டியன் 164 வாக்குகளும், திமுக வேட்பாளர் 164 வாக்குகளும் (அதிமுக - 76) பெற்ற நிலையில், குழுக்கல் முறையில் சத்யா வெற்றி பெற்றார்.
கரூர்
கரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கரூர் மாநகராட்சி 41 ஆவது வார்டில் வேட்பாளர் எம்.தண்டபாணி, புகளூர் நகராட்சி 22 ஆவது வார்டில் இந்துமதி அரவிந்தன், அரவக்குறிச்சி பேரூராட்சி 1 ஆவது வார்டில் கே.வி.கணேசன், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி 10 ஆவது வார்டில் தேவி நாகராஜன் ஆகியோர் அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிட்டனர். கரூர் மாநகராட்சியில் 41 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எம்.தண்டபாணி 1307 வாக்குகளும், தபால் வாக்கு 15 என மொத்தம் 1322 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்கள் அதிமுக 893, பாஜக அசோக்குமார் 57, சுயேச்சை வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். புகளூர் நகராட்சியில் போட்டியிட்ட சிபிஐ(எம்) வேட்பாளர் இந்துமதி அரவிந்தன் 443 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் யசோதா 362 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி 10 ஆவது வார்டில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தேவிநாகராஜன் 426 வாக்குகள், 3 அஞ்சல் வாக்குகள் என மொத்தம் 429 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வெள்ளையம்மாள் 34 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார். இந்த வார்டின் மொத்த வாக்குகள் 463. அரவக்குறிச்சி பேரூராட்சியில் சிபிஐ(எம்) 1 ஆவது வார்டில் போட்டியிட்ட கே.வி.கணேசன் 293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்கள் அதிமுக வீராச்சாமி 266, ஆறுமுகம் 98, பாபு 9, சிவகுமார் 17, மகாலிங்கம் 132 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாநகராட்சி 35 ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.வைஜெயந்திமாலா 1063 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் அதிமுக வேட்பாளரை விட 240 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார்.
கும்பகோணம் வார்டு 34
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி முதலாவதாக சந்தித்த இந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக 34 ஆவது வார்டில் மாமன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு ஆ.செல்வம் போட்டியிட்டார். இவர் 889 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் 565 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்தது. மீதி 5 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்.
கீரமங்கலம், கீரனூர் பேரூராட்சியில் தலா ஒரு வார்டில் சிபிஎம் வெற்றி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கீரனூர் பேரூராட்சிகளில் தலா ஒரு வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கீரமங்கலம் பேரூராட்சியில் 15 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஞா.பாலமுருகன் போட்டியிட்டார். மொத்த வாக்காளர்கள் 664. பதிவானவை 548. ஞா.பாலமுருகன் 370 வாக்குகள் பெற்று தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளரைவிட 224 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் 146 வாக்குகளும், நாம் தமிழர் 18 வாக்குகளும், சுயேட்சை 14 வாக்குகளுமே பெற்றனர். கீரனூர் பேரூராட்சி 6 ஆவது வார்டு வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்.மகாலெட்சுமி போட்டியிட்டார். மொத்த வாக்குகள் 753. பதிவானது 565. இதில் 235 வாக்குகள் பெற்று தனக்கு அடுத்தபடியாக வந்த சுயேட்சை வேட்பாளரைவிட 96 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சுயேட்சை வேட்பாளர் 139 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பெற்றார். அதிமுக வேட்பாளர் 102 வாக்குகளும், மற்றொரு சுயேட்சை 70 வாக்குகளும், நாம் தமிழர் 15 வாக்குகளும், அமமுக 4 வாக்குகளும் பெற்றனர். வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கலைச்செல்வன், எஸ்.மணிவண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், டி.சலோமி, பி.சுசீலா உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
குடவாசல்
குடவாசல் பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 ஆவது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் ஆர்.லெட்சுமி 453 வாக்குகளும், 15 ஆவது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் அமுதாராஜா 280 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். பேரளம் பேரூராட்சி 1 ஆவது வார்டில் கவுன்சிலர் பொறுப்புக்கு போட்டியிட்ட சிபிஐ(எம்) வேட்பாளர் சித்ரா மனோகரன் 160 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற வேட்பாளர் சித்ரா மனோகரன் பேரளம் கட்சி அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் கே.எம்.லிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேகர், டி.முருகையன் ஆகியோரை சந்தித்து வெற்றி பெற்ற சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி நகராட்சியின் 24 வார்டுகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் 20 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட 11 ஆவது வார்டு வேட்பாளர் ராமலோக ஈஸ்வரி 346 வாக்குகளும், 24 ஆவது வார்டு வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் 286 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
கோவில்பட்டி நகராட்சியில் போட்டியிட்ட
தூத்துக்குடி மாநகராட்சி 43வது வார்டில் சிபிஎம் வேட்பாளர் முத்துமாரி 179 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
மொத்த பதிவான வாக்குகள் - 2683
சிபிஎம் வேட்பாளர் பெற்ற வாக்குகள் - 1065
கோவில்பட்டி நகராட்சி வார்டு எண் 6
சிபிஎம் வேட்பாளர் முத்துராஜ் 188 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
சிபிஎம் வேட்பாளர் பெற்ற வாக்குகள் 765
கோவில்பட்டி நகராட்சி வார்டு எண் 10
சிபிஎம் வேட்பாளர் முத்துலட்சுமி 1 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
சிபிஎம் வேட்பாளர் பெற்ற வாக்குகள் 318
கோவில்பட்டி நகராட்சி வார்டு எண் 18
சிபிஎம் வேட்பாளர் விஜயா 408 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
சிபிஎம் வேட்பாளர் பெற்ற வாக்குகள் 634
கோவில்பட்டி நகராட்சி வார்டு எண் 27
சிபிஎம் வேட்பாளர் ஜோதிபாசு 58 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
சிபிஎம் வேட்பாளர் பெற்ற வாக்குகள் 336
கோவில்பட்டி நகராட்சி வார்டு எண் 31
சிபிஎம் வேட்பாளர் கே.சீனிவாசன் 177 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
சிபிஎம் வேட்பாளர் பெற்ற வாக்குகள் 475