tamilnadu

img

பழைய பென்சன் திட்டம் எங்கே?

நான்கு மாநிலங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துவிட்ட  நிலையில் சென்ற பட்ஜெட்டில்  தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவதற்கு சாத்தியமேயில்லை என தெரிவித்திருந்த நிதியமைச்சர் இந்த முறை அதைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசாதது அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மு.அன்பரசு மாநிலத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.

2003-ஆம் ஆண்டு இந்தியா விலேயே முதலாவதாக தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை  அறிவித்த ஜெயலலிதா அரசு முதற் கொண்டு, அதன்பிறகு ஆட்சியமைத்த கலைஞர் கருணாநிதி, எடப்பாடி பழ னிச்சாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோரது அரசுகள் வரை, அதை ரத்து செய்து பழைய பென்சனை அமலாக்க அரசு ஊழி யர்கள் நடத்திவரும் போராட்டம் 20 ஆண்டுகளை எட்டிவிட்டது.  கடந்த 20 ஆண்டுகள் அரசு ஊழி யர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் போன்றோருக்கு மிகவும் இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ள காலமாக அமைந்திருப்பதை ஆட்சியாளர்களும் அறிந்தே இருக்கிறார்கள்.  அரசு ஊழி யர்களின் ஊதியங்களை நிர்ணயம் செய்  வதில் மிகப்பெரிய முரண்பாடுகள் ஏற்  பட்டு அவற்றை களைவதற்கான முயற்சி களை மனுக்கள், கோரிக்கைகள், பிரதி நிதித்துவங்கள், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டங்கள், கண்டனத் தீர்மானங்கள், உண்ணாநிலைப் போராட்டங்கள், முற்று கைப் போராட்டங்கள் என அனைத்துவித மான போராட்டங்களையும் கடந்த பதி னைந்து ஆண்டுகளாக அரசு ஊழியர்கள்  - ஆசிரியர்கள் தொடர்ந்து நடத்தி வரு கிறார்கள். ஆனால், அவர்களது கோரிக்  கைகளை தமிழ்நாடு அரசு நேரடிப் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்க முன்வராமல் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைத்து அவர்கள் மூலம் பரிசீலிப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்  படுத்தி ஊதிய முரண்பாடுகளை மேலும்  சிக்கலாக்கியதுடன் மிகுந்த காலவிர யங்களையும் ஏற்படுத்தினர். கடந்த பதி னைந்து ஆண்டுகளில் அரசு ஊழியர்கள்  - ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களை களைவதற்காக அமைக்கப்பட்ட குழுக்கள் எதுவும் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை கவ னத்தில் கொள்ளாமலேயே தங்களின் விருப்பப்படி சமச்சீரற்ற ஊதிய மாற்றங் களை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் அவர்  களை போராட்டக் களங்களுக்கு தள்ளி யுள்ளன.  

இந்தியாவில் பிற மாநிலங்களில் அரசுத்துறைகளில், அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் பணியாளர்கள் துய்க்கின்ற உரி மைகளைத்தான் தமிழக அரசிடம் அரசு ஊழியர்கள் கோருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்ப ளம் தமிழகத்தில் உள்ள  அரசு ஊழி யர்கள் - ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, அடிப்படைச் சம்ப ளம் தவிர்த்து மற்ற அம்சங்களில் மிகுந்த பாகுபாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இதைப்போலவே ஊதிய மாற்றங்க ளில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை சரி செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை 2006ல் ஏற்படுத்தப்பட்ட ஊதிய மாற்றத்தி லிருந்தே  தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. சிறப்பு காலமுறை ஊதி யத்தில் பணிபுரிபவர்களுக்கு  வரைய றுக்கப்பட்ட ஊதியம் வழங்குவது குறித்து  பரிசீலிக்கப்படும் என அரசு அறிவித்தது அது பல ஆண்டுகளாக கிடப்பில் உள் ளது.  பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடியும் தருவாயில் உள்ள நிலையிலும்  தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட இது வரை நிறைவேற்றவில்லை என்பது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்  ளது. தற்போதைய பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான கடன்  வரம்பை ரூ.40 லட்சத்திலிருந்து வெறும்  ரூ.50 லட்சமாக உயர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பானது, இன்றைய பொருளாதார சூழலில்  நகைமுரணாகும்.   தற்போது நான்கு மாநிலங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை திரும்பப் பெற  நடவடிக்கை எடுத்துவிட்ட  நிலையில் சென்ற பட்ஜெட்டில்  தமிழ்நாடு அரசு  பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவதற்கு சாத்தியமேயில்லை என  தெரிவித்திருந்த நிதியமைச்சர் இந்த முறை அதைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசாதது அவநம்பிக்கையை ஏற்படுத்தி யுள்ளது.

மேலும் உறுதியளித்தபடி சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதி யம் வழங்காமல் உள்ளது; சிறப்பு கால முறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரை யறுக்கப்பட்ட ஊதியம் நிர்ணயிக்கப்படா மல் உள்ளது; சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி வரன்  முறை செய்து  41 மாத ஊதிய இழப்பை  வழங்கிட வைக்கப்பட்ட கோரிக்கை பரி சீலிக்கப்படாமல் உள்ளது. ஒன்றிய அரசு  ஊழியர்களுக்கு வழங்கப்படும் அக விலைப்படி உயர்வை தாமதிக்காமல் உடனே மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும். சரண்விடுப்பு ஒப்பு விப்பு மறுஉத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவை போக 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை யை உடனே வழங்குதல், தனியார்மய அரசாணைகளை ரத்து செய்தல், அரசுத்  துறையில் அவுட்சோர்சிங் முறை மற் றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை  கைவிட வேண்டும், தமிழக அரசுத்துறை களில் காலியாக உள்ள ஆறு லட்சம் பணி யிடங்களை உடனே நிரப்பிட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் தொடர்ந்து புறந்தள்ளப்பட்டு வருவது அரசு ஊழி யர்கள் சிந்தனையில் சினத்தை ஏற்படுத்தி யுள்ளது. இந்தப் பின்னணியில், 28.03.2023 அன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 28.3.2023 அன்று  திசை எட்டும் திரும்பி பார்க்கும் வகை யில் நடைபெறும் லட்சக்கணக்கான அரசு  ஊழியர்கள் பங்கேற்கும் ஒருநாள் அடை யாள வேலை நிறுத்தம் அரசாங்கத்தை நிச்சயம் அசைய வைக்கும்.