tamilnadu

img

எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் முற்றுகைப் போராட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 18- புதுக்கோட்டை மாவட்டம் வத்த னாகுறிச்சியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரியை நிரந்தரமாக மூடக் கோரி சனிக் கிழமை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்  கந்தர்வகோட்டை சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட குன்றாண்டார் கோவில் ஒன்றியம் வத்தனா குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட வெவ்  வயல்பட்டி மற்றும் வத்தனாகுறிச்சி யில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக எம்எம் கிரஷர் என்ற பெய ரில் கிரஷர், தார் பிளாண்டுடன் கூடிய தனியார் கல்குவாரி நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் குவாரி குறித்து அப் பகுதி மக்கள் கூறுகையில், இது  அரசு விதிமுறைகளை மீறி செயல் படுகிறது. குவாரியில் வைக்கப்படும் வெடியால் அதிர்வுகள் ஏற்பட்டு குடியிருப்பு சுவர்களில் விரிசல் ஏற்  படுகிறது. வெடி சத்தத்தினால் கர்ப்பி ணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படு கிறது. குழந்தைகள் மனதளவில் பாதிப்படுகின்றனர். கல்குவாரி மற்றும் தார் பிளாட்டிலிருந்து வரும் தூசி மற்றும் புகையினால் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால், மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் வருகின்றன. தண்ணீர் மாசடைந்து குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுகிறது. விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டு களை முன் வைக்கின்றனர்.

மேற்படி குவாரியை மூட வலி யுறுத்தி அப்பகுதி மக்கள் அதிகாரி களை சந்தித்து பலமுறை மனு அளித்துள்ளனர். அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தால் தங்கள் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினரான எம்.சின்ன துரையிடம் கிராம மக்கள் முறையிட்  டனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 15 அன்று புதுக்கோட்டையிலி ருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாமலை அருகே எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்தைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரி கள், குவாரியை தற்காலிகமாக மூடு வதாகவும், மீண்டும் குவாரியை திறக்க அனுமதிக்க மாட்டோம் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்நிலையில், எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் கடந்த நான்கு நாட்களாக குவாரி மீண்டும் இயக்கப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரையிடம் முறையிட்ட னர். இதனைத் தொடர்ந்து சனிக் கிழமை குவாரியை முற்றுகையிட்டு மீண்டும் போராட்டம் நடைபெற்றது

போராட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமை வகித்தார். வத்தனா குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா மாயழகு, ஒன்றியக் கவுன்சிலர் பி.எஸ்.சூசை, முன் னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்  செல்வன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கே.தங்கவேல், டி.சலோமி,  பி.சுசீலா, எஸ்.பாண்டிச்செல்வி, பேரூராட்சி கவுன்சிலர் எம்.மகா லெட்சுமி உட்பட நூற்றுக்கணக்கா னோர் பங்கேற்றனர்.

போராட்டத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் எம்.சின்ன துரை எம்எல்ஏ. பேசுகையில், “இந்த குவாரியினால் வத்தனாக்குறிச்சி, வெவ்வயல்பட்டி, வத்தனாக் குறிச்சிகாலனி, சத்திரப்பட்டி, தண்ணீர்பந்தல்பட்டி, கதிரேசன் நகர், புதுவயல், திருமலைராயபுரம், உடையாம்பட்டி, சூசையப்பர்பட்டி னம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி களைச் சேர்ந்த கிராம மக்கள் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் அளிக்  கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வில்லை. சுற்றுச்சூழல் துறையின் முறையான அனுமதியில்லை. அரசுப் புறம்போக்கு 1.5 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து  வருவாய்த்துறை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. கடந்த 15 வரு டங்களாக ஊராட்சி மன்ற நிர்வா கத்திற்கு ஒருமுறைகூட வரி செலுத்தப்படவில்லை. எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேற்படி குவா ரியை நிரந்தரமாக மூடுவது ஒன்றே இதற்கு தீர்வாக இருக்க முடியும். இதுகுறித்து தமிழக அரசு உடனே தலையிட்டு மேற்படி குவாரியை மூடி இப்பகுதி மக்களை பாதுகாக்க வேண்டும் என்றார். போராட்டத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமூக தீர்வு எட்டப்படும் வரை குவாரியை இயக்க அனுமதிக்க மாட்டோம் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம்  தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.