மைசூரில் நடைபெறும் தசரா பண்டிகையில் பல்லா யிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர். தசரா வுக்கு நிகராக தூத்துக்குடி மாவட்டம் குல சேகரப்பட்டினத்தில் உள்ள (தசராவில்) முத்தாரம்மன் கோவில் விழாவிலும் மக்கள் பங்கேற்பது வழக்கமான ஒன்று. குலசேகரட்டினத்தில் பத்தாயிரத்திற்கும் குறைவான மக்களே வசித்து வருகின்றனர். இந்த ஊர் மிக விரைவில் உலக அறிவியல் வரைபடத்தில் இடம் பெறப்போகிறது அப்படியென்ன நிகழப்போகிறது குலசேகரபட்டினத்தில்? இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) குலசேகரப்பட்டினத்தில் தனது இரண்டாவது விண்வெளித் தளத்தை அமைக்க உள்ளது, எதிர் வரும் ஆண்டு களில் மாறும், இஸ்ரோ அதன் சிறிய செயற்கைக் கோள் ஏவுகணைகளில் அதாவது (எஸ்எஸ்எல்வி) 500 கிலோவுக்கும் குறை வான எடையுள்ள செயற் கைக்கோள்களை விண் ணில் குலசேகரபட்டி னத்திலிருந்து இருந்து செலுத்தப்போகிறது.
தற்போது, சென்னை க்கு அருகில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவில் இரண்டு ஏவுதளங்களை இஸ்ரோ அமைத்துள்ளது இங்கிருந்து பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வியில் செயற்கைக்கோள்களை செலுத்துகிறது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் நேரடியாக தெற்கு நோக்கிச் செல்வதில்லை. ஏவுகணைகள் முதலில் தென்கிழக்கு பகுதிக்குச் சென்று (இலங்கையைத் தவிர்த்து) இலங்கையைத் தாண்டிய பின் ஒரு திசை மாற்றத்தை ஏற்ப டுத்த வேண்டியதுள்ளது. “செயல்முறையில், இதனால் நிறைய ஆற்றலை இழக்க நேரிடுகிறது. நேரடியாக தெற்கு நோக்கி ஏவுவதற்கு வசதியாக ஏவுதளம் இருந்தால் செயல்திற னில் இழப்பு குறையும். இதன் மூலம் நமக்கு ஆதாயம் உள்ளது, என்கிறார் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.சிவன். மேலும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து கொண்டு எஸ்எஸ்எல்வி விண்ணில் செலுத்தப்பட்டால், சுமந்து செல்லும் வாக னத்தின் திறன் பூஜ்ஜியமாகி, முழு தாங்கும் திறனும் இழக்கப்படும்.
குலசேகரப்பட்டினத் தில் உள்ள அமையவுள்ள ஏவுதளம் இந்த குறைபாட்டை போக்கும் என்றார். குலசேகரப்பட்டினம் ஏவுதளம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும். இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் கூறுகிறார் கே.சிவன். தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் குலசேகரபட்டினத்தில் ஏவுதளம் அமைக்க முயன்று வந்தார். இந்த ஏவுதளம் தமிழ்நாட்டின் தென்பகு திக்கு முக்கியமான வளர்ச்சியாக இருக்கும். தென் பிராந்தியத்தின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும். ஏவுதளம் அமைப்பதன் தொடர்ச்சியாக விமான நிலையம் மற்றும் துறைமுக வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் சிவன் கூறினார். நிலம் கையகப்படுத்தும் பணி இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் நிலத்தை இஸ்ரோவிடம் அரசு ஒப்படைக்கும் என்றும் அவர் கூறினார். சிவனின் கூற்றுப்படி, நிலம் கையகப்படுத் துதல் மற்றும் ஒப்படைத்தல் முடிந்ததும், இஸ்ரோ ஏவுதளத்தின் கட்டுமானத்தைத் தொடங்கும். ஏவுதளம் அமைக்க சுமார் ஒரு வருடம் ஆகலாம். இருப்பினும் மற்றும் பட்ஜெட் ஒதுக்கீட்டை ஐஎஸ்ஆர்ஒ கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக சர்வதேச வாடிக்கையாளர் களை ஈர்ப்பதில் எஸ்எஸ்எல்வி மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டிருக்கும், அதே நேரத்தில் உள்ளூர் தொழில்துறையினர் எதிர்காலத்தில் செயற்கைக்கோள்களை தாங்களே ஏவ முடியும்.