tamilnadu

img

ஆவடி மாநகராட்சி 10ஆவது வார்டில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படுமா?

அம்பத்தூர், ஜூலை 21- ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 10ஆவது வார்டில் அம்பேத்கர் நகர், மூர்த்தி நகர், ஜாக் நகர், வள்ளலார் நகர், தென்றல் நகர், விக்னேஷ் நகர், அம்பேத்கர் நகர் கிழக்கு ஆகிய பகுதிகள் உள்ளன.  இங்கு சுமார் 3,000க்கும் மேற்பட்ட வீடுகளும், 6,200 வாக்காளர்களும் உள்ளனர். இந்த பகுதிக்கு என தனியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கிடையாது. தற்போது அருகில் உள்ள 9ஆவது வார்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி யில் இருந்து அம்பேத்கர் நகர் கிழக்கு, விக்னேஷ் நகர், தென்றல் நகர் இரண்டு தெருக்களுக்கு மட்டும் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளுக்கு லாரி மூலம் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மட்டும் குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது. அது வும் முழுமையாக விநியோகம் செய்யப் படுவதில்லை என்றும் அதனால் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து மாமன்ற உறுப்பி னர் அ.ஜான் கூறுகையில், லாரி மூலம் முறையாக குடிநீர் விநி யோகம் செய்யப்படுவதில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நட வடிக்கையும் இல்லை. இந்த பகுதிக்கு குடிநீர் வழங்க பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள நித்திய கணபதி என்பவர் இந்த வார்டுக்கு வர வேண்டிய லாரிகளை, ஓட்டல், கடைகள் அல்லது வேறு பகுதிக்கு திருப்பி அனுப்புகிறார். எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இவரை மாற்றி வேறு ஒரு வரை நியமிக்க வேண்டும். இல்லை யென்றால் மக்களை திரட்டி போராடுவதைத் தவிர வேறு வழி யில்லை. அதேபோல் அருகில் உள்ள 7ஆவது வார்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வழங்கினால் ஓரளவுக்கு குடிநீர் பிரச்சனை தீரும் என்றார். மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் பிரச்சனையை தீர்க்க சிறப்பு கவனம் செலுத்துமா என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.