தலச்சேரி, அக்.3- தன் அன்புக் கணவர் கோடியேரி பால கிருஷ்ணனுக்கு இறுதி முத்தம் கொடுத்த வினோதினி மயங்கி விழுந்தார். கோடியேரியின் உடல் தலச்சேரி டவுன் ஹாலில் ஞாயிறன்று பொதுமக்கள் பார் வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அப் போது, அவரது மனைவி வினோதினி இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக முத்த மிட்டபோது மயங்கி விழுந்தார். முதல்வர் பினராயி விஜயனின் மனைவி கமலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக் குழு உறுப்பினர் பி.கே.ஸ்ரீமதி ஆகி யோர் வினோதினியை நாற்காலியில் அமர வைத்து தண்ணீர் கொடுத்தனர். மத்தியக் குழு உறுப்பினர் கே.கே.சைலஜா, மகளிர் ஆணையத் தலைவர் பி. சதிதேவி, இ.பி.ஜெயராஜனின் மனைவி பி.கே.இந்திரா, ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கே.ஷியாமளா ஆகியோர் கோடியேரியின் மகன்கள், மருமகள்களுக்கு ஆறுதல் கூறினர்.