2ஆவது நாளாக கிராம மக்கள் போராட்டம்
திருவண்ணாமலை, ஜூலை 11- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, தொடர்ந்து பெண் குழந்தை பிறந்த தகராறில், மனைவி அடித்து கொலை செய்யப் பட்டார். இதனால் ஆதிரமடைந்த பெண்ணின் உறவினர்கள் 2ஆவது நாளாக சனிக்கிழமை (ஜூலை 11) போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகு தியை சேர்ந்த தசரதன் (எ) மணிகண்டன் என்ப வருக்கும் ஷோபனா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கோபிகா, ரூபா, சிவசக்தி என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஷேபனாவின் தசரதன், ஆண் குழந்தை இல்லை என அடிக்கடி ஷோபனாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்த தாகக் கூறப்படுகிறது. தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக உள்ள ஷோபனாவிடம் மீண்டும் பெண் குழந்தை பிறந்தால் உன்னை விவாகரத்து செய்து விடுவேன் எனக் கூறி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஷோபனா மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே தசரதனின் உறவினர் ராமசந்திரன் அவரது மனைவி முனியம்மாள் ஆகியோர் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இதனை கண்ட கணவர் தசரதன், அவரது தந்தை ராஜாமணி, தாய் முனியாம்மாள் ஆகிய மூவரும் தலைமறைவாகி விட்டனர். பின்னர் கணவர் மணிகண்டனை மட்டும் காவல்துறையினர் கைது செய்தனர். இந் நிலையில் ஷோபனாவின் கொலைக்கு காரணமான, மாமனார் மற்றும் மாமியாரை கைது செய்ய வலியுறுத்தி ஷோபனாவின் உறவினர் மட்டுமின்றி, பள்ளிப்பட்டு கிராம வணிகர்கள், பொது மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.