tamilnadu

img

நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் கால தாமதம் ஏன்?

சென்னை, ஜன. 30 - நீட்விலக்கு சட்ட முன்வடிவு மீது முடிவெடுக்க அதிகாரம் இல்லாத போது, அதை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநர் காலதாமதம் செய்வது  ஏன்? என் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவ படிப்பில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் வகையில் மாநில சட்டப்பேர வையில், ‘தமிழ்நாடு இளநிலை மருத் ்துவப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான சட்டம் - 2021’ நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப் ்பட்டது. அதை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருகிறார். இதை எதிர்த்து மாணவர் அமைப் ்புகள், அரசியல் கட்சிகள் போராடி வருகி ன்றன. சட்டமுன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்று த்தரக்கோரி 3 முறை ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் வலியுறுத்தினார். அதன்பிறகும், ஆளுநர் சட்டமுன் வடிவை அனுப்பாமல் உள்ளார்இதனை கண்டித்தும், உடனடியாக சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பிட வலியுறுத்தி ஞாயிறன்று (ஜன.30) வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலை போராட்டம் நடை பெற்றது. பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தலைவர்கள் பேசியதன் சுருக்கம் வருமாறு:

கே.பாலகிருஷ்ணன்

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பேசுகையில், “ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்பட முடியும். வன்னியர்க ளுக்கு உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு 15 நிமிடத்தில் ஒப்புதல் வழங்கும் ஆளு நரால், சட்டமன்றத்தில் நிறைவேற் ்றப்பட்ட சட்டமுன்வடிவை மாதக்கணக் ்கில் இழுத்தடிப்பது ஏன்?

மாநில அரசுகள் விரும்பினால் நீட் தேர்விலிருந்து விலக்களிக்கலாம் என நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் அளித்தபிறகு, அதற்கெதிராக மருத்து வக்கல்வி சட்டத்தை ஒன்றிய அரசு திருத்தியது இந்தியாவின் மருத்துவ தலைநகராக சென்னை விளங்கு கிறது. இந்த மருத்துவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் பயின்ற வர்கள் அல்ல. நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறும்போது, அதனால் தகுதி உயரும் என்பது ஏமாற்று வேலை. மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட் ்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக் ்கீடு வழங்குவது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூகநீதிக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிரானது ‘நீட்’ தேர்வு” என்றார். “தலித், பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களை மருத்துவ கல்விக்குள் செல்லாமல் நீட்தடுகிறது. கோச்சிங் சென்டர்களுக்கு பயன ளிப்பதாக நீட் உள்ளது. பொறியியல், கலை அறிவியல் படிப்புகளுக்கும் நீட் தேவை கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு செய்து கொடுத்த அறிக்கை யில் அடிப்படையில் நீட் தேர்விலிருந்து விலக்கு  கோரும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சா ரம் என்ற வகையில் ஒரே கல்வி முறையை கொண்டு வர முயற்சிக் ்கிறார்கள். அராஜகமான, அடாவடித்த னமான ஆட்சியை பாஜக நடத்துகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு அனை வரும் ஒன்றுபட்டு மாணவர் படை யோடு போராடுவோம். ஆகவே, தொடர் உண்ணாநிலை போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குறிப்பிடுகையில், “ஒன்றிய  அரசின் கைத்தடியாக ஆளுநர் செயல் படுகிறார். அரசியலமைப்புச் சட்டமும், அதனடிப்படையில் உருவான அமைப்பு களுக்கும் கேலிக்குறியதாக மாற்றப் ்பட்டு வருகிறது. சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டுள்ளது, அரசின் அணுகுமுறை கள் பாசிசத்தன்மையோடு உள்ளது. நீட் தேர்விற்கு எதிராக தமிழக மக்கள் உள்ளனர். எனவே, ஆளுநர் மசோதா வை குடியரசு தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றுத்தராவிடில் தமிழ கத்தை விட்டு வெளியேற வேண்டும். ஒன்றுபட்டு போராடி வெற்றி பெறு வோம்” என்றார்.

தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசு கையில், “அரசமைப்புச் சட்டத்தை, அதன் மாண்புகளை சிதைக்கும் வகை யில் நீட் தேர்வு உள்ளது. ஒத்திசைவு பட்டியலில் உள்ள அதிகாரங்களை ஒன்றிய அரசே எடுத்துக் கொள்கி றது. நீட் தேர்விலிருந்து விலக்கு என்பது ஒரு இடைக்கால ஏற்பாடுதான். கல்வி யை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். பாடத்திட் ்டத்தை வரையறுப்பதும், தேர்வு நடத்து வதும் மாநில அரசின் உரிமை.” என்றார். “இந்தியாவின் பன்முகத்தன் ்மையை சிதைத்து ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே கல்விக் கொள்கையை கொண்டுவரும் சதி நீட் தேர்வில் அடங்கி உள்ளது. மாநில உரிமை, கல்வி உரிமை பாதுகாக்க போராடுகிறோம். ஒன்றிய அரசின் திறை மறைவு வேலைகள், சதிகளை அமல் படுத்தும் வகையில் போராட்டம் அமைய வேண்டும். தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள சமூக நீதிக்கான கூட்ட மைப்பு என்பது, 2024 தேர்தலில் பாஜக வை வீழ்த்துவதற்கான முன்னெடுப்பே” என்றும் அவர் கூறினார்.

டி.கே.எஸ்.இளங்கோவன்

திமுக உயர்நிலை செயல் திட்டக் ்குழு உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோ வன் எம்.பி., பேசுகையில், “மாநில சட்ட மன்றம் நிறைவேற்றிய சட்டமுன் ்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப் ்பாமல் ஆளுநர் மக்களை அவமதித்து வருகிறார். தமிழர்களுக்கு நேர்ந்துள்ள இந்த அவமானத்தை போக்க திமுக உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து போராடும்” என்றார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

முன்னதாக போராட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய பிரின்ஸ் கஜேந்திரபாபு, “சட்டமன்றம் நிறை வேற்றிய சட்ட முன்வடிவிற்கு எதிராக ஆளுநர், கருத்து பிரச்சாரம் செய்கி றார். அரசியலமைப்பு சட்டத்திற்கு மாறாக, அரசின் கொள்கை முடி வுக்கு எதிராக, ஒன்றிய அரசின் விருப்ப த்திற்கு ஏற்ப செயல்படுகிறார். மக்களாட்சி மீது நம்பிக்கை இழக்கச் செய்து, கலவர சூழலை உருவாக்கிட பாஜக முயற்சித்து வருகிறது. அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல் கிடைக்கும் வரை வலுவான போராட்டத்தை நடத்த வேண்டும்.” என வேண்டுகோள் விடுத்தார். இந்தப் போராட்டத்தின் நோக்க த்தை விளக்கி பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் தலைவர் பி.ரத்தின சபாபதி பேசினார். இணையம் வழி யாக யுஜிசி முன்னாள் தலைவர் சுகதியோ தோரட், மத்திய கல்வி ஆலோ சனைக் குழுமம் மேனாள் உறுப்பினர் அனில் சட்கோபால், மேனாள் துணை வேந்தர் வே.வசந்தி தேவி ஆகியோர் பேசினர். உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், காங்கிரஸ் கட்சி சட்டமன்றக்குழுத் தலைவர் கு.செல்வ பெருந்தகை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் உள்ளிட்டோர் பேசினர்.