2021 மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த ஏன் மோடி அரசு பீதிகொள்கிறது? 2011க்கு பின்னர் இதுவரை 14 கோடி பேர் மக்கள் தொகையில் இணைந்துள்ளனர். இவர்கள் கணக்கில் சேர்க்கப்படுவது இல்லை. இவர்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சமஸ்திப்பூரில் இது குறித்து பேசினோம். பீகாரில் ‘ஜன் ஆக்ரோஸ்’ எனும் பேரணிகளை சிபிஐ(எம்) நடத்தி வருகிறது. மோடி அரசின் கேடுகெட்ட மக்கள்விரோத கொள்கைகளை கண்டித்து மாநிலம் முழுவதும் நடக்கும் இத்தகைய பேரணிகளில் சமஸ்திப்பூரில் பங்கேற்றோம்.