யார் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உழைக்கிறேன் என்று சொல்கிறார்களோ அவர்கள் உண்மையில் பாஜக பக்கம் இருக்கமாட்டார்கள். ஆனால், சிலர் திருமாவளவனை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர் என்றெல்லாம் வதந்தி பரப்புகிறார்கள். உண்மையில், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை பாதுகாத்தது திருமாதான். பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டிற்காக குரல் கொடுத்தவர் அவர். தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்று இல்லை. மற்ற மாநில பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் திருமாவளவன் குரல் கொடுத்தார். பாஜக இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கும் கட்சி. சமூக நீதியை ஒழிக்கும் கட்சி. ஆனால், இடஒதுக்கீட்டிற்காக குரல் கொடுக்கும் கட்சி விசிக. மக்களுக்கு காவல் அரணாக திருமா இருக்கிறார். அரியலூரில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பேசியதிலிருந்து...