tamilnadu

img

யார் முதல்வர்? அதிமுகவில் கிளம்பியது புகைச்சல்

மதுரை:
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என மாறி மாறி முதல்வராகிவிட்டனர். கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் முதல்வராக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. 2021- ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றன.

சட்டசபை தேர்தல் களத்தில் அதிமுகவும் புயல்வேகத்தில் இருப்பதாகக் கூறியுள்ள மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் கூட்டுறவுத்துறை  அமைச்சருமான செல்லூர் ராஜூ, தேர்தல் வெற்றிக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கூடி முதல்வரை முடிவு செய்வோம் என்று கூறினார். இது அதிமுகவில் புகைச்சலை உருவாக்கியுள்ளது.இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடி யார்தான் என்றும் முதல்வர்,”எடப்பாடியார் என்றும் முதல்வர்/ இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடி யாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் காண்போம்! வெற்றி கொள்வோம்!  2021-ம் நமதே! என்று கூறியுள்ளார்.கூடி முடிவெடுப்போம் என்கிறார் செல்லூர் கே.ராஜூ. எடப்பாடி தான் முதல்வர் என்கிறார் இராஜேந்திர பாலாஜி. அமைச்சர்கள் தங்களது நாடகங்களை தொடங்கிவிட்டனர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.