சென்னை, ஜன.9- அண்டை மாநிலங்களுடன் நட்புறவைப் பேணும் அதேவேளையில், மாநிலங்க ளுக்கு இடையே பாயும் நதிகளின் நீர்ப் பிரச்சனைகளில் தமிழகத்தின் உரிமைக ளைப் பாதுகாத்திட அரசு உறுதியாக உள்ளது என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டின் உழவர் பெருமக்களைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தேவை யான நடவடிக்கைகளை அரசு மேற் கொண்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்திற்கு நீர் தேக் கப்பட்டுள்ளதோடு, அணையின் உயரத்தை மேலும் உயர்த்த அனைத்து முயற்சிகளை யும் அரசு மேற்கொண்டு வருகிறது. பெண்ணையாற்றில் இருந்து கர்நாடக மாநிலம் அனுமதியின்றி தண்ணீரை திசை திருப்பும் பிரச்சனையில், மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நதிநீர் தீர்ப்பாயத்தை விரைந்து அமைத்திட இந்த திமுக அரசு வலியுறுத்துகிறது. கூடுதல் தண்ணீரை சேமிக்க ஏற்பாடு மாநிலம் முழுவதும் நீர்ப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 1,334.10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஆறு பெருந்திட்டங் களை இந்த அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது. இதன் பயனாக, 2.59 டி.எம்.சி அளவிற்கு கூடுதல் நீரைச் சேமிக்கவும் 6.92 டி.எம்.சி நீரை திரும்ப மீட்டெடுக்கவும் இயலும். அரசின் தொடர் கண்காணிப்பின் விளைவாக, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு திட்டம் மற்றும் அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.