அமைச்சருக்கு சிக்கலை ஏற்படுத்திய அதிமுக
மதுரை, ஜூன் 1- மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதி பகுதி யில் திங்களன்று கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்க அதிமுகவினர் ஏற்பாடு செய்தி ருந்தனர். நிகழ்வில் கூட்டுறவுத் துறை அமைச்சரும் மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினரு மான செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டார். இந்த நிகழ்விற்காக சாலை யை மறித்து பந்தல் போடப்பட்டி ருந்தது. மின்சாரம் அருகிலுள்ள மின்கம்பத்திலிருந்து எடுக்கப் பட்டிருந்தது. இதற்கு மதுரை மாநகராட்சியோ, மின்வாரியமோ அனுமதியளித்ததா எனத் தெரிய வில்லை. இது குறித்து விசாரித்த போது, யாருக்காகவும் எந்தச் சூழலிலும் நேரடியாக மின்கம் பத்திலிருந்து மின்சாரம் எடுப்ப தற்கு(?) மின்வாரியம் அனும திக்காது எனத் தெரிவித்தனர் மின்கம்பத்திலிருந்து அதி முகவினர் மின்சாரத்தை எடுத் தது பகுதி மக்களிடையே சல சலப்பை ஏற்படுத்தியது. மின்கம் பத்திலிருந்து எத்தனை யூனிட் மின்சாரம் ‘எடுக்கப்பட்டது’. அதற்கான பணத்தை கட்டுவது யார் என்ற கேள்வியும் எழுந்துள் ளது. அமைச்சர் நிகழ்விற்கு மின்சாரம் எடுக்கப்பட்டது எப்படி என்பதை மின்வாரியம் தெளிவுபடுத்த வேண்டும். இது குறித்து மதுரை ஆட்சியர் விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ரேஷன் அரிசி முறைகேடு-பணி நீக்கம்
அதே நேரத்தில், பெத்தானி யாபுரம் அண்ணா மெயின் வீதி பகுதியில் உள்ள நம்பர்- 2 ரேஷன் கடையில் அரிசி வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விடம் கடையில் அரிசி வாங்கி வந்த பெண் ஒருவர் புகார் அளித்தார். உடனடியாக அந்தக் கடைக்குச் சென்ற அமைச்சர் ஊழியர்களை கண்டித்ததோடு பணியாளர் ஒரு வரை பணிநீக்கமும் செய்தார்.