மதுரை, ஜூன் 9- மதுரையில் ஆகஸ்ட் மாதம் வரை கோவிட் 19 தொற்று பாதிக்கப்பட் டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரிக்கக் கூடும் என்று அதிர்ச்சிகர தக வலை மதுரை மாநகராட்சி அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகுதான் மதுரையில் கொரோனா பாதிப்பு படிப் படியாக குறைய துவங்கும் என்றும், எனினும் பரவலை கட்டுப்படுத்து வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் உடனடி யாக கட்டுப்படுத்துவதில் பல பிரச்ச னைகளை மாநகராட்சி நிர்வாகம் எதிர்கொண்டு இருப்பதாகவும் அவர் கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையிலிருந்து குவிகிறார்கள்
சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மது ரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு பெரிய சவா லாக உருவாகியுள்ளது என தெரி விக்கும் அதிகாரிகள், அதிகாரப்பூர்வ மாக 1800க்கும் அதிகமான இ- பாஸ்கள், மதுரைக்கு வருபவர் களுக்காக அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இ-பாஸ் இல்லாமல் பெரிய எண்ணிக்கையில் ஏராளமானோர் மதுரைக்கு வந்து கொண்டிருக்கிறார் கள்; அவர்களை தடுத்து நிறுத்துவது தான் கடினமான பணியாக இருக்கி றது என்றும் கூறுகின்றனர். வேறு இடங்களிலிருந்து மது ரைக்கு வருபவர்கள், குறிப்பாக சென் னையிலிருந்து மதுரைக்கு வருபவர் கள் யாராக இருந்தாலும் அவர்கள் கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண் டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தனிமையில் 12 தெருக்கள்
மதுரை மாநகரை பொறுத்தவரை மார்ச் மாத நிலவரத்தின் படி வெறும் 6 பேர் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். மார்ச் 21 அன்று தான் முதல் பாதிப்பு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக ஏப்ரலில் 45 பேரும், மே மாதத்தில் 74 பேரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஜூன் 5 வரை 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத் தத்தில் 143 பேருக்கு மதுரையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கி றது. ஜூன் 4 ஆம் தேதி நிலவரத்தின் படி மதுரை மாநகரின் 12 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்க ளாக இருக்கின்றன.
அதிக ஆபத்தான இடமாக செல்லூர்
இதுதொடர்பாக மதுரை மாநக ராட்சி ஆணையர் எஸ்.விசாகன் கூறு கையில், மாநகராட்சி நிர்வாகம், தொற்று பாதிப்பை கண்டறிவது மற் றும் பரவலை தடுப்பது என்ற முறை யிலான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது; அதிக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என்றார். மேலும், குறிப்பாக செல்லூர் பகுதி அதிக பாதிப்பு அபாயம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட் டுள்ளது என்று குறிப்பிட்ட ஆணையர், செல்லூர் பகுதி 10 பிரிவுகளாக பிரிக் கப்பட்டு வீடு வீடாக தொடர்ச்சியாக காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதிக் கப்பட்டு வருகிறது. இந்த பணியில் 120 செவிலியர் பயிற்சி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதி யில் காய்ச்சல் இருப்பதாக அடையா ளம் காணப்படுபவர்கள் அந்தந்த பிரி வில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அங்கு தனி மைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப் படுகிறது. கொரோனா அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் உடனடியாக பரி சோதனை செய்யப்படுகிறது என்றும் மாநகராட்சி ஆணையர் விவரித்தார். இதுதவிர மாநகரில் பரவலாக கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகள் அளிப்பது நடந்து வருகிறது. தற்சம யம் சுமார் 1.5 லட்சம் குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்குவதற்கான பணி நடந்து கொண்டிருக்கிறது; இவை அனைத் தும் நன்கொடையாளர்களின் உதவி யோடு நடக்கிறது என்றும் அவர் கூறினார்.
சு.வெங்கடேசன் எம்.பி. அறிக்கை
மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளின் கருத்துப் படி, மதுரை யில் கொரோனா பரவலை கட்டுப் படுத்த மேற்குறிப்பிட்ட நடவடிக்கை களை தவிர, வேறு சிறப்பான பரி சோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படவில்லை என் பது தெரிகிறது. இன்னும் குறிப்பாக தற்போது புதிய சவாலாக எழுந்துள்ள - சென்னையிலிருந்தும், பிற பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் எவ்வித சோதனையும் இல்லாமல் மதுரைக்கு வந்து குவிந்து கொண்டி ருப்பது பெரும் பிரச்சனையாக மாறி யிருக்கிறது. இந்நிலையில், சென்னை யை போல மதுரை மாறிவிடக் கூடாது என்றும் கொரோனா தீவிரமாகும் ஆபத்திலிருந்து மதுரையை பாது காக்க மாநராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடி திட்டத்தை செயல் படுத்திட வேண்டும் என்று நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: நியூயார்க் போல மும்பை மாறி விடக்கூடாது, மும்பைபோல சென்னை மாறிவிடக்கூடாது, சென்னை போல மதுரை மாறிவிடக்கூடாது. ஒன்றின் அனுபவத்தில் இருந்து பாடங்கற்று மற்ற நகரங்களை வரும்முன் காப் பதே முக்கியம். அந்த வகையில் மதுரை கொரோனா வின் தீவிரத்தாக்குதல் மையமாக மாறாமல் இருக்க உடனடியான அவ சர திட்டமிடல் தேவைப்படுகிறது.
குறிப்பாக கடந்த பத்து நாட்களில் சென்னையில் இருந்து மதுரைக்கு நான்குசக்கர வாகனத்தில் வந்துள்ள வர்களின் எண்ணிக்கை (இ பாஸ் பெற்று) சுமார் 8000. இரயிலில் வந்துள் ளவர்களின் எண்ணிக்கை (விழுப்புரம் – மதுரை) சுமார் 5000. விமானத்தில் வந்துள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 2000. இவர்களில் விமானத்தில் வந்தவர்களுக்கு மட்டுமே கடந்த ஐந்து நாட்களாக கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. சாலையிலும், ரயிலிலும் வந்துள்ளவர்கள், விமா னத்தில் முதல் ஐந்து நாட்களாக வந்துள்ளவர்களின் மொத்த எண் ணிக்கை சுமார் 14000. இவர்களில் யாருக்கும் கொரோனா சோதனை செய்யப்படவில்லை. இது அடுத்த ஓரிரு வாரங்களில் நிலமையை மிக மோசமானதாக மாற்றிவிடும். எனவே உடனடியாக சோதனையின் அளவினை மிக அதி கமாக உயர்த்த வேண்டும். இ பாஸ் பெற்று வந்தவர்கள் அனைவருக்கும் அடுத்த ஓரிரு நாளில் சோதனையை செய்து முடிக்க வேண்டும். இரயில் வருபவர்களுக்கு தினமும் மாதிரி பரி சோதனையை அதிக எண்ணிக்கை யில் நிகழ்த்த வேண்டும். உடனடியாக இந்த முடிவினை அமுலாக்கவில்லை என்றால் மதுரை யில் பெரும் எண்ணிக்கையில் தொற்று பரவலாக்கம் நிகழும். இதனால் ஏற்க னவே நோயாளிகளாக உள்ளவர் களும், ஏழை எளிய மக்களும் கடுமை யாக பாதிப்புக்கு உள்ளாவார்கள். அடுத்த ஓரிரு வாரங்களில் அரசு நிர்வா கம் மிக விழிப்புணர்வோடு இப்பணி யை செய்யவில்லையென்றால் நிலைமை கைமீறிப்போகும் ஆபத்து நேரிடும். மதுரை, தென்மாவட்டங்களின் சந்திப்பு மையம். எனவே மதுரையின் நிலையே தென் மாவட்டங்கள் முழு மையும் பிரதிபலிக்கும். இந்த ஆபத் தினை உணர்ந்து மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் செயல்பட வேண் டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
‘30 ஆவது இடம் என்பது அதிர்ச்சியளிக்கிறது’ |
மதுரை மாவட்ட ஆட்சி யரை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் இரா. விஜயராஜன் ஆகியோர் திங்க ளன்று சந்தித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் சு.வெங்க டேசன் எம்.பி. தெரிவித்ததாவது; தமிழகத்தில் கொரோனா பரி சோதனை இதுவரை எவ்வளவு செய் யப்பட்டுள்ளது என்று புள்ளி விப ரங்களை தமிழக அரசு வெளியிட் டுள்ளது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை அந்த புள்ளி விவ ரங்கள் அதிர்ச்சியளிப்பதாக உள் ளது. ஜூன் 7 ஆம் தேதி நிலவரப் படி இதுவரை மதுரையில் 14102 பரிசோதனைகள் மட்டுமே செய்யப் பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை என்பது தேனி, திருநெல்வேலி, கன் னியாகுமரி ஆகிய மாவட்டங்களை விட மிகக் குறைவு. மக்கள் தொகை விகிதாச்சாரத் தின் அடிப்படையில் ஒரு லட்சம் பேருக்கு செய்யப்பட்ட சோதனை யின் அளவு மாநில அளவில் 6420 ஆக உள்ளது. ஆனால் மதுரையின் அளவு அதில் சரிபாதியாகத்தான் உள்ளது. அதாவது 3975 மட்டுமே. பிற மாவட்டங்களை ஒப்பிட்டால் 30 ஆவது இடத்தில் மதுரை இருக்கி றது. இது மிக மிக அதிர்ச்சியை கொடுப்பதாக உள்ளது. தென் மாவட்டங்களின் மைய மாக உள்ள மதுரையில் தென் மாவட் டங்களிலேயே மிகக்குறைந்த அளவு சோதனை செய்யப்பட்டிருக் கிறது. வருவாய்த்துறை அமைச்சர் மதுரையில் ஒவ்வொருமுறை ஆய் வுக் கூட்டங்களை நடத்தி விட்டு அதி கமான பரிசோதனைகள் செய்யப் படுகிறது என்று ஊடகங்களில் கூறி னார். அவை உண்மை என்று நாமும் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் இன்றைக்கு தமிழக அரசு அறி வித்துள்ள புள்ளிவிவரம் என்பது மிகப்பெரும் அதிர்ச்சி அளிக்கின் றது. போதுமான பரிசோதனைகள் மதுரையில் எடுக்கப்படவில்லை. எனவே மதுரை மக்களவை உறுப்பி னர் என்ற அடிப்படையில், மாவட்ட ஆட்சியரிடம் நாம் எவ்வளவு பின் தங்கியுள்ளோம் என்பதை எடுத்துக் கூறியுள்ளேன். கடந்த 10 நாட்களில் சராசரியாக நாளொன்றுக்கு 250 டெஸ்டுகள் மட் டுமே எடுக்கப்பட்டுள்ளது. இதில் உட னடியாக மாற்றம் தேவை. கடந்த 10 நாட்களில் சுமார் பத்தாயிரம் பேர் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்துள்ளார்கள் அவர்கள் அனை வருக்கும் சோதனை மேற்கொள் ளப்பட வேண்டும் எனவே இன்றி லிருந்து தினசரி 3 ஆயிரம் டெஸ்டு கள் என்ற அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் எடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அடுத்து வரும் வாரங்களில் மதுரை யில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்துவிடும். ஐசிஎம்ஆர் மற்றும் உலக சுகா தார நிறுவனம் கூறியுள்ளபடி தொற்று பரவலாக்கத்தை தடுப்பது தான் நோய் பாதிப்பில் இருந்து மக் களை மீட்பதற்கான ஒரே வழி. வரும் நாட்களில் மாவட்ட நிர்வாகம் சோத னைகள் செய்வதில் முழுவேகத்து டன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். |