சென்னை, ஜூலை 16- செம்மரக்கட்டைகள் என்றாலே திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதி தான் பலருக்கும் நினைவில் தோன்றும். விலை மதிப்புள்ள இந்த கட்டைகளை கடத்தி சென்று விற்பனை செய்வதில் பல்வேறு கும்பல்கள் ரகசியமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கான பணிகளில் அப்பாவி தமிழர்கள் அதிகம் ஈடுபடுத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கட்டை கடத்தல் சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 20 பேர் தனிப்படை காவல் துறை யினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது 25 தமிழர்கள் மரம் வெட்டியதாகக் கூறி கைது செய்யப்பட் டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. திருப்பதி அருகே செம்மரக்கட்டை கடத்தலை தடுக்க அதிரடிப்படை சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இவர்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டி ருந்த போது 25 தமிழர்கள் கைது செய்யப் பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் செம்மரக்கட்டைகளை வெட்டி லாரி மூலம் கடத்தி செல்ல முயற்சி செய்து கொண்டிருந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அப்போது சுற்றி வளைத்து தனிப்படை காவல் துறையின ரால் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 30 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்ம ரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள் ளன. தற்போது பிடிபட்ட 25 தமிழர்களையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மரம் வெட்ட வேண்டும் என்று கூறித்தான், ஒவ்வொரு முறையும் வனப்பகுதிக்குள் அழைத்து செல்லபடுகின்றனர். ஆனால் கடைசி நேரத்தில் செம்மரக்கட்டைகளை வெட்ட வைத்து விடுவதாக பாதிக்கப்படும் நபர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒருவேளை முன்கூட்டியே விஷயத்தை சொல்லி செம்மரக்கட்டைகளை வெட்ட அழைத்து செல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வ தக வல்களை வெளியிடும் போதுதான் உண்மை நிலவரம் தெரியவரும். அப்போது 25 தமிழர் களின் எந்தெந்த மாவட்டங்களை சேர்ந்த வர்கள் என்பதும் தெரியவரும்.