ஒன்றிய அரசின் சார்பில் ‘காசி தமிழ் சங்கமம்’ என்கிற நிகழ்வு நவ.16 முதல் டிச.20 வரை நடத்தப்படுகிறது. கல்வி, கலாச்சாரம் என 12 துறை சார்ந்தவர்களை தேர்ந்தெ டுத்து அயோத்தி, வார ணாசி உள்ளிட்ட இடங்க ளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளனர். இந்த நிகழ்விற்கு சென்னை ஐஐடியும் பனாரஸ் இந்து பல்கலைக் கழகமும் இணைந்து அறிவுசார் ஒத்துழைப்பை வழங்குகின்றன. தமி ழகத்துக்கும், வாரணாசி என்று அழைக்கப்படும் காசிக்கும் இடையில் உள்ள கல்வி, பொருளா தார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளிக்கொணருவது இதன் நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா செல்பவர்களுக்கு தமிழ் இலக்கி யத்தில் பாரதத்தின் புவியியல் பரப்பை கற்போம்; இராமாயணம், மகாபாரதத்தில் தமிழ் நாட்டுப்புற கலைகள் - கதைகள்; தமிழ்நாடு, காசியில் உள்ள ஆன்மீக தலங்கள் கோவில்கள் என்பன போன்ற தலைப்புகளில் வகுப்புகளை நடத்த உள்ளனர். இந்த நிகழ்வில் குறிப்பிடப் பட்டுள்ள இடங்களும், தலைப்புகளுமே இதில் மறைந்துள்ள ஆர்.எஸ்.எஸ் யாத்திரை திட் டத்தை அம்பலப்படுத்துகிறது. இந்த நிகழ்வை அக்.28 அன்று சென்னை ஐஐடி யில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல தமிழ்த்தாய் வாழ்த் திற்கு முன்பாக தேசிய கீதம் பாடப்பட்டது. தமி ழகத்தில் நிகழ்வு துவங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும் நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் பாடுவதும்தான் மரபு. ஆனால், தமிழை இரண்டாம் பட்சமாக கருதும் ஆர்எஸ்எஸ் சிந்தனையின் திட்டமிட்ட வெளிப்பாடாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. நிகழ்வைத் தொடங்கி வைத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “சிலப்பதிகாரம், மணி மேகலை போன்ற தமிழ் சங்க இலக்கியங்க ளில் மதுரா, காசி, அயோத்தி குறித்து குறிப்பி டப்பட்டுள்ளது” என்று மணற்கயிறு திரித்தார். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவையே சங்க இலக்கியங்களாகும். சிலப்பதிகாரம், மணிமேகலை என்பவை காப்பியங்கள் என்ப தையும் அறியாதவராக உள்ள ஆளுநர்தான் அவ்வப்போது தமிழை ஆர்.எஸ்.எஸ் சித்தாந் தத்தோடு முடிச்சுப்போட்டு பேசி வருகிறார்.
ஒன்றிய அரசாங்கத்தின் வலைதளத்தில், இந்த நிகழ்வை எந்த வடிவத்தில் முன்னெடுக்க வேண்டும் என்பதை அந்த மாநில அரசும், யூனி யன் பிரதேச அரசும் முடிவு செய்து செயல் படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் ஆளுநர் தொடங்கி வைத்துள் ளார். தமிழக அரசின் பங்கேற்பு எதுவும் அறி யப்படவில்லை. அகண்ட பாரதம், காசி, அயோத்தி பயணம் என்பதற்கும் ஐஐடி-க்கும் என்ன சம்மந்தம்? இவை அனைத்தையும் ஒரு புள்ளியில் இணைப் பது ஆர்.எஸ்.எஸ் உள்ளடக்கம் என்பதையே இவை எடுத்துக்காட்டுகின்றன. ஆராய்ச்சிக் கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய ஐஐடி மத நடவடிக்கைகளில் ஈடுபடு வது ஏன்? உயர் ஆராய்ச்சிக் கல்வி நிறு வனத்தின் வேலை இதுதானா? என்ற கேள்வி கள் எழுகின்றன. இரண்டு மாநிலங்களுக்கு இடையான பண்பாட்டைப் பற்றியும் இந்தியாவை குறித்து மேலும் தெரிந்து கொள்வதற்காகவுமான ஒரு வாய்ப்பை ஏன் ஆர்எஸ்எஸ், பாஜகவை சார்ந்த ஆட்களை மட்டும் வைத்து நடத்த வேண்டும்? மாநில அமைச்சர்கள் பங்கேற்காத வகையில் நடத்தப்படும் நிகழ்வின் மூலம் எப்படி மாநிலங்களுக்கு இடையே பரிமாற்றம் நிகழும்? இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரை யில் கூறப்பட்ட மதசார்பின்மையை முற்றிலு மாக காலில் போட்டு மிதிக்கும் ஒரு திட்டத்தை தமிழக ஆளுநர் துவக்கி வைத்துள்ளார். அரசி யல் ரீதியான எதிர்வினை என்பதோடு சித்தாந்த ரீதியான எதிர்வினையும் அவசியமானதா கும். அதற்கு கல்வி நிலையங்கள் ஜனநாய கப்படுத்தப்பட்டு, இளம் தலைமுறையினரிடம் முற்போக்கு கருத்துக்கள் எடுத்துச் செல்ல வழி வகை செய்ய வேண்டும்.