tamilnadu

img

யார் சார் நீங்க! - பி.ஆர்.அரவிந்தாக்சன்,ஊடகவியலாளர்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களே! தமிழகத்தில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அந்த கட்சிக ளும்,அதன் தலைவர்களும் இந்த மாநிலத்திற் கான உரிமை,மக்கள் பிரச்சனைகள் குறித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும் போராடி வருகின்றனர். அவர்கள் யாருமே நீங்கள் காட்டும் ஆணவத்தையோ, அகம்பாவத்தையோ ஊடகவியலாளர்க ளிடமோ/செய்தியாளர்களிடமோ இதுவரை ஒருபோதும் காட்டியதில்லை.

தமிழகத்தின் எந்தவொரு மக்கள் பிரச்சனைக்கும் போராட வீதிக்கு வராத,சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத, ஒரு கட்சி யின் மாநிலத் தலைவரான நீங்கள் அரசி யலுக்கு வந்து எவ்வளவு நாட்களாகிறதென தெரியுமா? ஒரு வருடம் நான்கு மாதங்கள் நான்கு தினங்கள் மட்டுமே! ஆனால் என்னவோ பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு உயிரைக் கொடுத்து போராடிய தலைவரைப்போல நீங்கள் காட்டும் பிம்பம் இருக்கிறது பாருங்கள். விபரம் தெரியாதவர்கள் பார்த்தால் நிச்சயம் உண்மை என்றே நம்பி விடுவார்கள். சமூகவலைத்தளங்களில் கிடைக்கும் கிளுகிளுப்புக்கும்,உங்களைச் சுற்றி  இருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளை குதூக லப்படுத்தவும் ஊடகவியலாளர்கள்/செய்தி யாளர்கள் மீது பயந்து பிராண்டும் உங்களது உத்தி,நீண்டகால அரசியலுக்கு ஒருபோதும் உதவாது. ஒருவேளை உதவும் என்று நம்புகிறீர்கள் என்றால் உங்களை நினைத்து மிகவும் பரிதாபப்படுகிறேன்.

கருத்துரிமை ஜனநாயகம் குறித்து எல்லாம்  நீங்கள் பேசுவதில்லை. நமக்கு பேசத் தகுதியில்லாத விஷயங்க ளைப் பேசக்கூடாது என்று உணர்ந்து மிக கவனமுடன் செயல்படுகிறீர்கள்; வார்த்தைகளை உதிர்க்கிறீர்கள்.. 2016 தேர்தலுக்கு பின் எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் பலமுறை ஊடகங்கள் அதிமுக  அரசுக்கு பயப்படாமல் உண்மையை எழுத/பேச வேண்டும் என கூறியிருக்கிறார். நாங்கள் சொல்வதை நீங்கள் எழுத மாட்டீர்கள்,டிவியில் போடமாட்டீர்கள் எனவும் ஸ்டாலின்  ஆதங்கப் பட்டிருக்கிறார். இப்போது நீங்கள் போகும் இடமெல்லாம் ஏளன எள்ளல் தொனிக்க ‘கோபாலபுர மீடி யாக்கள்’ என்று விமர்சிக்கிறீர்கள். யார் சார் நீங்க? என்ன சார் செஞ்சுட்டீங்க தமிழக மக்களுக்கு !எங்க இருந்து சார் உங்களு க்கு இவ்வளவு தடித்தனம்  வந்தது ?

2015 Mம் ஆண்டு மார்ச் மாதம் 11-Mம் தேதி, புதிய தலைமுறை அலுவலகம் மீது ஒரு ‘தேச பக்தர்’ 2 டிபன் பாக்ஸ் வெடி குண்டுகளை வீசிவிட்டார். குண்டு வீசறவனை உலகமே தீவிரவாதின்னு சொன்னாலும், குண்டு வீசியவன் பாரத் மாதாகீ ஜே சொல்லிட் டான்னா உங்கள்  கட்சியின் பார்வையில் அவன் தேச பக்தன் தானே! அவருக்காக பாஜக வழக்கறிஞர்கள் நீதி மன்றத்தில் ஆஜரானார்கள். அந்த தேச பக்தனுக்காக எல்லா சட்ட உதவிகளையும் செய்தார்கள்.

இத்தனைக்கும் குண்டு வீசியவன் உங்கள் கட்சி கூட கிடையாது. தமிழகத்தில் மதக்கலவரத்தை உண்டாக்கவேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் செயல்படும் கல்யாணராம னுக்கு உங்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு உதவுகிறது. இந்த மாதிரி காரியங்களுக்கு வேலை செய்வதற்கு மட்டும் தான் வழக்கறி ஞர் பிரிவு வச்சிருக்கீங்களா என்ன ?

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் இருப்பது ‘கோபாலபுர மீடியாக்கள்’ என்று நீங்கள் சொல்வதை..“உங்கள் திருப்திக்காக” உண்மை என்றே வைத்துக்கொள்வோம்.பாஜக ஆட்சி செய்யும் குஜராத்தில்,மத்தியப் பிரதேசத்தில், இமாச்சல்,ஹரியானா,கர்நாடகா,உத்தரப்பிரதேசம், மணிப்பூர்,திரிபுரா, நாகலாந்து,உத்தரகண்டில் இருக்கும் மீடி யாக்களை என்ன பெயர் சொல்லி அழைக்கி றீர்கள் அண்ணாமலை? நீங்கள் கட்சித் தலைவராக பதவியேற்ற பின்னர்,ஆறு மாதத்தில் தமிழக மீடியாக்களை நம்ம கண்ட்ரோல்ல கொண்டுவந்து விடலாம்; சம்பந்தப்பட்ட துறைக்கு நம்ம முருகன்ஜி தான் அமைச்சர்னு பேசியது நியாபகம் இருக்கா உங்களுக்கு? அந்த துறை மூலமாக ஒன்றிய அரசுக்கு எதிராக  அவதூறு பரப்பும் தமிழக ஊடக நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்க சார். அதை விட்டுட்டு, அதென்ன சார் நான் இப்படி தான் பேசுவேன்; பேட்டியை போட்டா போடுங்க, இல்லேன்னா குப்பையில் போடுங்கன்னு பேச்சு!

உங்களையும் உங்கள் கட்சியையும் மதித்து,பல பணிநேரம் காத்திருக்கும் ஊடக/ பத்திரிகையாளர்களை மிகவும் அவமா னப்படுத்துகிறீர்கள் மிஸ்டர் அண்ணாமலை. உங்களைப்போல ஒரு ஆசாமியை தமிழக ஊடகத்துறை இதுவரை சந்தித்ததில்லை.. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என மதிக்கப்படும் இந்திய பத்திரிகைத் துறைக்கு உலகளவில் என்ன பெயர் என்று தெரியுமா உங்களுக்கு ?“கோயபல்ஸ் மோடி மீடியா” (Godi media) இந்திய ஊடகத்துறை உலகள வில் சந்தி சிரித்துக்  கிடக்கிறது அண்ணா மலை... சந்தி சிரித்துக் கிடக்கிறது! இதெல்லாம் எதுவும் தெரியாமல் நீங்கள் ஏதோ ‘கோபாலபுர மீடியாக்கள்’ என வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கொண்டி ருக்கிறீர்கள்.

ஏபிபி தொலைக்காட்சியில் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ என்ற ஒரு நிகழ்ச்சியை புன்யா ப்ரசூன் பாஜ்பாய் என்ற ஊடகவியலாளர் நடத்திக்கொண்டிருந்தார். ஒரு நாள்...பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சத்தீஸ்கரை சேர்ந்த ஒரு பெண் விவசாயி, சீத்தாப்பழ விவசாயம் மூலம் தனது லாபம் இரட்டிப்பானது என்று பேசினார். அவர் பொய்யாக அப்படிப் பேசியதையும், அரசு அதி காரிகள் அந்தப் பெண்ணுக்கு பயிற்சி அளித்து பேச வைத்தனர் என்பதையும் தனது ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நிகழ்ச்சியில் அம்ப லப்படுத்திவிட்டார் புன்ய பிரசூன். அடுத்து என்ன நடந்தது தெரியுமா ?

மோடி என்ற பெயரையே பயன்படுத்தக் கூடாது என  தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக் கப்படுகிறது. மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சி ஒளி பரப்பாகும் போதெல்லாம் செயற்கைகோள் ஒளிபரப்பில் தொழில்நுட்பரீதியாக இடைஞ் சல் கொடுக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கருப்புப் பண மீட்பு போராட்டம் எனும் நாடகம் நடத்தி பாஜக ஆட்சிக்கு பிறகு பெரும் தொழிலதி பரான யோகா குரு  பாபா ராம் தேவின் ‘பதஞ்சலி புராடக்ட்ஸ்’ நிறுவனம், அந்த தொலைக்காட்சிக்கு கொடுத்து வந்த அனை த்து விளம்பரங்களையும் திடீரென நிறுத்திக் கொண்டது. கடைசியில் புன்ய ப்ரசூன் ராஜினா மா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். இப்படி ஒன்றிய அரசின் அழுத்தத்தால் வேலையை விட்டு துரத்தப்பட்ட, அல்லது ராஜினாமா செய்து விலகிய ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

ஆர்ஆர்ஏஜி (RRaG) என்ற அமைப்பு 

“இந்தியா: கோவிட்-19 ஊரடங்கின் போது ஊடகத்தின் மீதான ஒடுக்குமுறை” என்ற தலைப்பில் வெளியிட்ட ஆய்வறிக்கையை படித்திருக்கிறீர்களா அண்ணாமலை ? புலம் பெயர் தொழிலாளர்கள், கொரோனா கால மக்களின் பிரச்சனை போன்றவை குறித்து பேசிய நபர்கள் மீது கொரோனா குறித்து தவறான தகவலை பரப்புவதாக கூறி 31 பத்திரிகையாளர்கள் மீது  ஒடுக்குமுறை ஏவப்பட்டது. அதில் பெரும்பாலானவை பாஜக ஆளும் மாநிலங்கள்.

உண்மையில்,அப்போது தப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்டவர்களே கொரோ னா பரவலுக்கு காரணம் என்ற மதத்துவேஷ பிரச்சாரத்தை உங்கள் கட்சி மட்டுமே இந்தியா முழுமைக்கும் செய்துகொண்டிருந்தது. எனவே கண்ணியம் காக்க முற்படுங்கள் மிஸ்டர் அண்ணாமலை!