tamilnadu

img

மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு நினைவரங்கம், சிலை

மயிலாடுதுறை, ஏப்.29-  மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடு துறையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் நினைவரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு  அறிவித்திருப்பதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வரவேற்றுள்ளதோடு நன்றியையும் தெரிவித்துள்ளன. ‘முதல் இந்திய நீதிபதியான தமிழர், முதல் தமிழ் நாவலாசிரியர், தமிழில் சட்ட நூல்தந்தவர். கவிஞர், எழுத்தாளர், மயிலாடுதுறையின் முதல் நகர்மன்ற தலைவர் என ஏராளமான சிறப்புகளுக்கு சொந்தக்காரர்தான் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. 1826 ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று சவரிமுத்து- ஆரோக்கியமேரி தம்பதியினருக்கு மகனாக திருச்சிக்கு அருகேயுள்ள குளத்தூரில் பிறந்தார்.

கத்தோலிக்க கிறிஸ்தவரான வேதநாயகனாரின் மூதாதையினர் சைவவேளாளர் மரபாக இருந்தாலும் கிறிஸ்துவத்தை தழுவி வாழ்ந்துள்ளனர்.மாயூரம், மாயவரம், மயிலாடுதுறை என அழைக்கப்படும் நகரில் தனது இறுதி நாள் வரை வாழ்ந்தவர் வேதநாயகம் பிள்ளை.  மாயூரம் என்றழைக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்த தால் அவரின் பெயரிலேயே ஊரின்பெயரும் ஒட்டிக் கொண்டது. தனது 11-வயது வரையிலும் குளத்தூரில் திண்ணை பள்ளி ஒன்றில் தமிழை கற்றுக்கொண்டார். தமிழ்-ஆங்கிலம் இருமொழிகளிலும் புலமைப் பெற்ற தியாகபிள்ளை என்பவரிடம் திறம்பட கற்றுக் கொண்டதோடு 8 ஆண்டுகளுக்குள்ளாகவே அதில்  புலமையும் பெற்றார். 1848-ல் தனது ஆசிரியர் தியாகப்பிள்ளையின் சிபாரிசின் பேரில் திருச்சிராப் பள்ளி நீதிமன்றத்தின் ஆவணக் காப்பாளராக பணி யில் சேர்ந்தார். பிறகு 1850-ல் திருச்சி மாவட்ட நீதி மன்ற மொழிப் பெயர்ப்பாளராக பணி உயர்வு பெற்றார்.

முதல் இந்திய தமிழ் நீதிபதி

உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்ய 1856-ல் கும்பகோணம் மாவட்ட நீதிபதியாக அப்போது பணிபுரிந்த பீச்சாம்பு என்பவரை தேர்வாள ராக நியமித்து ஆங்கிலேய அரசு எழுத்து தேர்வை நடத்தியது. மாயூரம் வேதநாயகர் அதில் தேர்வானார். 1857ல் தரங்கம்பாடி உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக தனது 31 ஆவது வயதில்நியமிக்கப்பட்டு அங்கு ஓராண்டு காலம் பணியாற்றினார். வெறும் 60 ரூபாய் ஊதியத்துக்கு நீதிபதியாக பணியாற்ற முடியாது என தேர்வில் கலந்துகொண்ட மற்றவர்கள் மறுத்தபோது, வேதநாயகர் பணியாற்ற முன் வந்ததை ஆங்கிலேயர்கள் பாராட்டி மாதம் 100  ரூபாய் சம்பளத்தை அவருக்கு வழங்கினர். பிரிட்டிஷ் காரரின் கீழ் பணியாற்றினார். ஆனால் தன்மா னத்தை ஒருபோதும் இழக்காமல் நீதி தவறாது, நேர்மையுடனும் செயலாற்றினார். இந்தியர்களின் முதல் நீதிபதியாக, தமிழரான வேதநாயகம் பிள்ளை பணியமர்த்தப்பட்டு ஆங்கிலேயர்களாலேயே மிகவும் கவரப்பட்டவராகவும் திகழ்ந்தார். 1858ல் சீர்காழிக்கு பணிமாறுதலில் சென்றார்.  1860-ல் மயிலாடுதுறைக்கு மாற்றப்பட்டு அங்கேயே தனது இறுதி நாள் வரை வாழ்ந்தார். ஆங்கிலேய நீதிபதிகளால் மரியாதையும், மதிப்பு மிக்க நீதிபதியாக அவர்களால் முதல் வகுப்பு  நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார்,

 வேதநாயகனாரி டம் சென்றால் தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை  மக்களிடம் பரவியது. வெவ்வேறு நீதிமன்றங்களில் நடந்த வழக்குகளை அவர் பணியாற்றிய நீதிமன்றத் துக்கு மாற்றித்தரும்படி மக்கள் வற்புறுத்தும் அள விற்கு அவருடைய தீர்ப்புகள் மக்களை கவர்ந்தன. சீர்காழியில் பணியாற்றிய காலத்திலிருந்தே வேத நாயகர் தனது படைப்புகளை வெளியிட தொடங்கி விட்டார். இலக்கியம், நீதி சார்ந்த நூல்கள் மட்டுமின்றி ஏராளமான படைப்புகளை வெளியிட்டு வந்தார்.  1858-ல் நீதிநூல் என்ற நூலை முதன் முதலாக வெளியிட்டார். 1869-ல் பெண்கல்வி என்றநூலையும் 1870-ல் பெண்மானம் என்கிற  இரண்டு உரைநடை நூல்களையும் 1879-ல் முதல்தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம், 1887-ல் சுகுண சுந்தரி, 1869-ல் பெண்மதிமாலை, பொம்மை கல்யாணம், 1862-ல் சோபனப்பாடல்கள், தனிப்பாடல்கள், 1873-ல் திருவருள்மாலை, திருவருள்அந்தாதி, தேவமாதாஅந்தாதி, 1889-ல் தேவதோத்திரமாலை, 1873-ல் பெரியநாயகி அம்மை பதிகம், 1878-ல் சர்வ  சமயசமரசக் கீர்த்தனைகள், 1889-ல்சத்திய வேதக் கீர்த்தனைகள், 1862-ல் சித்தாந்த சங்கிரகம், 1863-ல் 1850-இலிருந்து 1861 வரையிலான புகழ்பெற்ற தீர்ப்புகள் அடங்கிய 2 நூல்களையும் வெளியிட்டார்.  தனது வாழ்நாளில் 18 நூல்களை மாயூரம் வேத நாயகம் பிள்ளை மக்களுக்கு வழங்கியதோடு அவர் பணியாற்றிய காலத்தில் நீதிமன்றத்தில் தமிழில் வாதாடு வதற்கு உரிமையை பெற்று தந்ததோடு தமிழில் சட்ட நூலையும் வெளியிட்டு தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

தன்மானமே பெரிதாய்

சீர்காழியிலிருந்து மயிலாடுதுறைக்கு மாற்றலாகி பணியாற்றிய போது தஞ்சை மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய நெல்சன் என்பவருக்கு உரிய மரியாதையை வேதநாயகர் அளிக்கவில்லை என்று தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை பணிநீக்கம் செய்தனர். பின்னர் குற்றமற்றவர் என ஆங்கிலேய அதிகாரிகள் உணர்ந்து மீண்டும் பணியாற்ற வற்புறுத்திய போதும் அதனைஏற்க மறுத்த வேதநாயகம் பிள்ளை, தன்மானத்தை இழந்து  பணியாற்ற என்னால் முடியாது என்றும் ஓய்வுபெற்றுக் கொள்வதாகவும், தாம் சுதந்திரமானவன், ஆங்கிலே யனுக்கு அடிமையானவன் அல்ல என 1872-ல் பணியை உதறித் தள்ளினார். தாம் மணந்துகொண்ட மனைவிகள் தொடர்ந்து அடுத்தடுத்து உயிரிழந்த தால் 5 பெண்களை அவர் மணக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.   3வது மனைவி மாணிக்கத் த்தம்மாளுக்கு மட்டுமே 1 ஆண் பிள்ளையும் 2 பெண் பிள்ளைகளும் பிறந்தனர். அவர்களுடைய சந்ததி யினர் தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தலைவனாக

நீதிபதி வேலையை தூக்கி எறிந்துவிட்டு மயிலாடு துறையிலேயே தங்கிய வேதநாயகம் பிள்ளை ஏழை, எளிய மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து மக்கள் விரும்பும்தலைவனாய் புகழ்பெற்றார். 1876-78 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான உண வுப் பஞ்சத்தின் போது தனதுபெரும் சொத்தை விற்று  மயிலாடுதுறை பகுதிகளில் பல இடங்களில் கஞ்சித் தொட்டிகளை அமைத்து மக்கள் பசியைப்போக்கினார்.  1873-ல் மயிலாடுதுறையின் நகராட்சிக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவரது பத விக்காலத்தில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் முறை யாகச் செய்து தரப்பட்டன. தனது இலக்கியங்களில், கவிதைகளில் பெண்கல்வி குறித்தும் மக்களின் கலாச்சாரம், பண்பாடு குறித்தும் வேதநாயகர் எழுதி னார். பெண்கள் கல்வியறிவில் உயர வேண்டும் என்ற  உன்னத நோக்கத்தோடு மயிலாடுதுறையில் பெண் கள் மேல்நிலைப் பள்ளியை உருவாக்கி பெண் கல்வியை வளர்த்தார். மயிலாடுதுறையை தனது சொந்த ஊராக நினைத்து அங்கேயே இறுதி காலம் வரைவாழ்ந்து, 1889 ஆம் ஆண்டு ஜூன் 21 அன்று உயிரிழந்தார். அவரது உடல் கத்தோலிக்க கிறிஸ்த வர்கள் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

தமுஎகச வரவேற்பு

முதல் தமிழ் நாவலாசிரியர், முதல் இந்திய தமிழ்  நீதிபதி, கவிஞர், எழுத்தாளர் என பல்வேறு சிறப்பு களுக்கு சொந்தக்காரரான மாயூரம்  வேதநாய கர் இறந்த பின்பு அவரது நூல்களை அரசுடைமை யாக்கப்பட்டது. ஆனால் அவரது நினைவை போற்றும் விதமாக இதுவரை அவர் பெயரில் எந்தவித நினைவு சின்னங்களையும் அமைக்கவில்லை என்ற குறை இருந்து வந்தது. மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடுதுறையில் மணிமண்டபமும், சிலையும் அமைக்க வேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் தொடர்ந்து கோ ரிக்கை விடுத்து வந்தது மாநாடுகளில் தீர்மானங்களையும் நிறைவேற்றி வந்தது. இந்நிலையில்  தமிழக அரசின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்புக்குரியது என தமுஎகசவின் மாவட்டச் செயலாளர் பேராசிரியர் பாலசுந்தரம் கூறியுள்ளார். தமுஎகசவின் மாநிலக்குழு  மற்றும் மாவட்டக்குழு சார்பில் தமிழக அரசுக்கு நன்றியை  தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

செ.ஜான்சன்