சென்னை, மார்ச் 15 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராம லிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: அனைத்து புத்தகங்க ளும் ஒரே இடத்தில் கிடைக் கும் நோக்கத்தை நிறை வேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கப் படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தி ருப்பதை தமுஎகச மன தார பாராட்டி வரவேற்கி றது. அனைத்து புத்தகங்க ளையும் ஒரே இடத்தில் வாங் கவும் அனைத்துப் பதிப்பா ளர்களும் விற்பனையாளர்க ளும் புத்தகவிரும்பிகளும் ஒரே இடத்தில் சந்திக்கவும் ஏதுவாக புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என்றும் அதற்கான நிலத்தை அரசு வழங்கும் என்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் முன் பொரு முறை வெளிப்படுத் திய விருப்பத்தை விரைவில் நிறைவேற்றுவதாக இன் றைய முதல்வர் உறுதியளித் திருக்கிறார். தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற் றும் பதிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களின் ஆலோச னையைப் பெற்று இந்த புத்தகப் பூங்காவிற்கான நிலத்தைத் தேர்வு செய்து அரசு வழங்குவதுடன், தன் னால் ஆன அனைத்து முயற்சிகளையும் அரசு செய்யும் என்றும் முதல்வர் அறிவித்திருப்பது, தமிழ்ப் பதிப்புத்துறையின் செயல் பாடுகளை வலுப்படுத்தும் என தமுஎகச கருதுகி றது. இதன் தொடர்ச்சி யில் மாவட்டத் தலைநகரங்க ளிலும் மாநகராட்சிகளிலும் நிரந்தர புத்தக விற்பனை வளா கங்களை அமைப்ப தற்கும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என தமுஎகச கேட்டுக் கொள்கிறது.