சென்னை,மார்ச் 5- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் வெளி யிட்டுள்ள அறிக்கை வரு மாறு: சேலம் பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல் ராஜ் கொலை வழக்கில் யுவ ராஜ் உள்பட 10 பேர் குற்ற வாளிகள் என்ற நீதிமன்ற தீர்ப்பினை தமிழ்நாடு தீண்டா மை ஒழிப்பு முன்னணி வரவேற்கிறது. கோகுல்ராஜ் கடத்தப் படுவதற்கு முன்பு அவருடன் பேசிக்கொண்டிருந்த மாணவி உள்பட பலரும் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்ட நிலையிலும் சிறப்பு வழக்கறி ஞர் மோகன் மீண்டும் 106 சாட்சிகளையும் மறுவிசா ரணை செய்து நீதியை போராடி பெற்றிருக்கிறார். இவ்வாறு ஒரு வழக்கறிஞர் கிடைக்காமல் போயிருந்தால் இந்த வழக்கில் நீதி கிடைத்திருக் காது என்பதை தமிழக அர சுக்கு சுட்டிக் காட்ட விரும்பு கிறோம். எனவே கொடூரமான கொலை வழக்குகளில் எஸ்சி எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச்சட்டத்தின்படி சிறப்பு வழக்கறிஞர் நியமனம் என்பது நீதியைப் பெறுவதில் முதல்படி என்பதை இந்த வழக்கின் வழியாகவும் அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். அதோடு சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டத்தை தாமதப் படுத்தாமல் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.