tamilnadu

6 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்

சென்னை, மார்ச் 20 - திருச்சி, மதுரை உள் ளிட்ட 6 மாவட்டங்களில் வெளியில் சதமடித்துள்ளது. கோடைக்காலம் ஆரம் பித்துள்ள நிலையில் தற்போதே வெயில் அதிக மாக சுட்டெரித்து வருகி றது. காலை முதலே அதிகப் படியான வெப்பத்தால் சாலைகளில் மக்கள் நட மாட்டம் குறைந்து காணப் படுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்க ளில் அடுத்த மூன்று தினங்க ளுக்கு மழை பெய்யும் என்று  வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. அதே போல உள்மாவட்டங்களி லும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை  ஆய்வுமையம் தெரிவித் துள்ளது. இந்நிலையில் தமிழ கத்தில் ஞாயிறன்று (மார்ச் 20)  திருச்சி, சேலம், நாமக்கல், மதுரை, கரூர், ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் வெயில் 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. அதிபட்சமாக கரூர் மாவட் டத்தில் 40.0 செல்சியஸ் (104 ஃபாரன்ஹீட் டிகிரி ) வெயில் பதிவானது.