tamilnadu

img

சிறுபான்மை மக்களின் அரசியல் சாசன உரிமைகளை பாதுகாப்போம்!

பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள், தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இம்மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் சிறுபான்மை மக்களின் அரசியல் அமைப்புச் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றிய மோடி அரசை வலியுறுத்தியும்,  தாக்குதல் தொடுக்கும் ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்களின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் டிசம்பர் 1 அன்று நாடு முழுவதும் கண்டன தினம் கடைப்பிடிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அழைப்பு விடுத்திருந்தது. அதன் அடிப்படையில் டிசம்பர் 1 புதனன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டன தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் உரையாற்றிய காட்சி. இப்போராட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், பி.வி.ராகவலு, ஹன்னன் முல்லா,  தில்லி மாநிலச் செயலாளர் கே.எம்.திவாரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

;