அமலாக்கத் துறையின் மிரட்டலுக்கு பணிய மாட்டோம்!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
புதுக்கோட்டை, மே24- ஒன்றிய அரசின் அமலாக்கத் துறைக்கு பயப்படும் கட்சி திமுக அல்ல என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மேற்கொண்ட சனிக்கிழமை ஆய்வுப் பயணத்தின்போது இவ்வாறு கூறினார். திட்டப் பணிகள் ஆய்வு மற்றும் நிதி ஒதுக்கீடு புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் அரசு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த துணை முதல்வர், மாவட்ட விளையாட்டு மைதானத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது சில பணிகளில் சுணக்கம் இருந்தது தெரிய வந்ததாக வும், பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரி வித்தார். விளையாட்டு மைதானத்தில் கட்டப்பட்டு வந்த உள் விளை யாட்டரங்கப் பணிகளை முடிப்பதற்கு மேலும் 4.50 கோடி தேவைப்படுவ தாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதை யடுத்து பணிகளை மேற்கொள்ள ரூ.3.5 கோடியை முதல்வர் ஒதுக்கி யுள்ளார். எஞ்சியுள்ள நிதியை சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கி வரும் டிசம்பருக்குள் பணிகள் முடிக்கப்படும் என்றார். எதிர்கட்சி விமர்சனத்திற்கு பதிலடி அப்போது, அமலாக்கத் துறைக்குப் பயந்து முதல்வர் டெல்லிக்கு சென்றுள்ளதாக எதிர்கட்சியினர் விமர்சிக்கும் கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “ஈடி என்ன? மோடிக்கே நாங்கள் பயப்படுவ தில்லை. மிரட்டி அடிபணிய வைப்ப தற்கு திமுக ஒன்றும் அடி மைக் கட்சி அல்ல. எதையும் சட்டப்பூர்வமாக சந்திப்போம்” என்று உறுதியாக தெரிவித்தார். தமிழகத்திற்கான நிதி உரிமையை பெறவே டெல்லியில் நடைபெறும் நிதி ஆயுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொண்டுள்ளதாகவும், இதனை அரசியலாக்குவதற்காக எதிர்கட்சியினர் விமர்சித்து வருவதாகவும் குறிப்பிட்டார். மக்கள் மனுக்களை காகிதமாக பார்க்கக்கூடாது பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வெறும் காகிதமாகப் பார்க்க முடியாது என்றும் துணை முதல்வர் வலியுறுத்தினார். தமிழக அரசு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து, ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளதாகவும், இந்த ஆட்சியில் பெண்கள், மாணவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். “மனுக்களை வெறும் காகிதமாக பார்க்காமல் அதன் பின்னால் உள்ள மக்களின் வாழ்க்கையை பார்க்க வேண்டும். அதை மனதில் வைத்து அரசு அலுவலர்கள் செயல்பட வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார். குறிப்பாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளிக்கும் பொதுமக்களை அலைக்கழிக்காமல் உடனுக்குடன் அவர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பட்டா வழங்கும்போது மக்கள் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ரூ.40 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1,175 பயனாளிகளுக்கு ரூ.40,05,31,067 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முக்கிய உதவிகள்: 125 நரிக்குறவர்களுக்கு* (பழங்குடி யினத்தவர்கள்) ரூ.3,59,61,812 மதிப்பிலான இடங்களுக்கான வீட்டு மனைப் பட்டாக்கள் மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகள் ஆயிரம் நபர்களுக்கு* (125 நரிக்குறவர்கள் உள்பட) கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா ரூ.3.50 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் 50 பயனாளிகளுக்கு ஆட்சேப ணையற்ற புறம்போக்கில் வரன்முறைப்படுத்தி பட்டா வழங்குதல் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.1,45,69,255 மதிப்பிலான இடங்களுக்கான பட்டாக்கள் பங்கேற்றோர் இந்நிகழ்ச்சிகளில் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.எம். அப்துல்லா, துரை.வைகோ, எஸ்.ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் மா.சின்னதுரை, வை.முத்துராஜா, எஸ்.டி.ராமச்சந்திரன், தாட்கோ தலைவர் நா.இளையராஜா, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட ஆட்சியர் மு.அருணா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.