சென்னை,டிச.29- ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலை யைத் திறப்பதற்கு முன்பு அங்குப் பணிச்சூழல், தொழி லாளர் நலன் ஆகியவை உயர்தரத்தில் உள்ளதா என்பது குறித்து உறுதி செய்யப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரி வித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் தொழிற்சாலை யில் ஆப்பிள் நிறுவனத்து க்கு ஐபோன் தயாரிக்கப்படு கிறது. இந்த ஆலையில் பணி யாற்றும் தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் தரக்குறை வான உணவை உண்டதால் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பணிச் சூழல், தொழிலாளர் நலனை உறுதி செய்யும் வகை யில் பாக்ஸ்கான் ஆலை யின் நிர்வாகம் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக வும் ஆலையின் நிலைமை யைத் தொடர்ந்து உன்னிப் பாகக் கவனித்து வருவ தாகவும், உயர் தொழில் தரத்தை உறுதி செய்த பின்னர்தான் ஆலை திறக்கப் படும் என்றும் ஆப்பிள் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள் ளார்.