tamilnadu

img

மோடி அரசை தூக்கி எறிய வியூகம் வகுப்போம்!

தடேபள்ளி(குண்டூர், ஆந்திரா), ஜன.15- வரவிருக்கும் நாட்களில் ஒன் றிய மோடி அரசாங்கத்தைத் தூக்கி எறிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதே கட்சியின் முன் உள்ள பிரதான கடமையாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஆந்திர மாநில 26ஆவது மாநாடு டிசம்பர் 27-29 தேதிகளில் குண்டூர் மாவட்டம் தடேபள்ளி யில் எழுச்சியுடன் நடைபெற்றது. துவக்க அமர்விற்கு கட்சி யின் ஆந்திர மாநில செயலாளர் பி.மது தலைமை வகித்தார். மாநாட் டின் வரவேற்புக்குழுத் தலைவர் வி.கிருஷ்ணய்யா வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி துவக்கவுரையாற்றினார். அப் போது அவர் கூறியதாவது: வரவிருக்கும் நாட்களில் ஒன் றிய மோடி அரசாங்கத்தைத் தூக்கி எறிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதே கட்சியின் முன் உள்ள பிரதானமான கடமையா கும். ஒன்றிய மோடி அரசாங்கம், ஆர்எஸ்எஸ்-இன் நிகழ்ச்சிநிர லான இந்துத்துவா ராஷ்டிரத்தை நிறுவுவதற்கான அனைத்து வேலை களிலும் தீவிரமாக இறங்கி இருக் கிறது. அவர்கள் இந்திய அரச மைப்புச்சட்டத்தை மதிப்பதே இல்லை. அரசமைப்புச் சட் டத்தின்கீழ் தற்போதுள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடி யரசை, தாங்கள் விரும்பும் பாசிச இந்துத்துவா ராஷ்டிரமாக மாற்றுவதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி இருக்கிறார் கள். இந்திய அரசமைப்புச்சட்டத் தின் அடித்தளங்களையே அழித் துக் கொண்டிருக்கிறார்கள். இந் தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் மாண்புகளை யும் அழித்துக் கொண்டிருக்கிறார் கள். இவற்றை நாம் அனுமதிக்க முடியாது.

மார்க்சிஸ்ட் கட்சியின் முன் னணி ஊழியர்கள், ஒன்றிய அர சாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நடை பெற்றுவரும் மக்களின் வெகு ஜனப் போராட்டங்களுக்குத் தலைமையேற்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எந்தவித மான விவாதமுமின்றி சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மூன்று நிமிடங்களில் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவிடுகின்றன. நாடாளுமன்ற நடைமுறை களே தடம்புரண்டு கொண்டிருக் கின்றன. ஜனநாயகம் ஆபத் திற்குள்ளாகி இருக்கிறது. நாட்டின் கூட்டாட்சித்தத்து வத்திற்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து மாநில அரசு களும் ஒன்றுபட வேண்டும் என்று சீத்தாராம் யெச்சூரி வேண்டு கோள் விடுத்தார்.

பிரதிநிதிகள் மாநாடு

பிரதிநிதிகள் மாநாட்டில் 480 பிரதிநிதிகள் கலந்துகொண்டார் கள். தெலுங்கானா மாநில செய லாளர் டி.வீரபத்ரம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செய லாளர் கே.ராமகிருஷ்ணா வாழ்த் துரை வழங்கினார்கள்.

தீர்மானங்கள்

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும், 2014 ஆந்திரப்பிரதேசம் மறுசீரமைப்புச்சட்டத்தின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள உறுதி மொழிகளை அமல்படுத்த வேண் டும் என்றும் வலியுறுத்தி, அதற் காக ஒன்றுபட்ட போராட்டத்திற்கு மக்களை அணி திரட்டுவது என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மாநில அரசாங்கத்தின் தலைநகராக அமராவதி தொடர வேண்டும் என்றும், கர்னூலில் ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் அமைந்திட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

பிரகாஷ் காரத்

கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் வாழ்த்துரை வழங்குகையில், பிரதிநிதிகளின் விவா தத்தின் தரம் மிகவும் சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிட்டார். ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவா ரங்கள் திட்டமிட்டு, படிப்படியாக மக்கள் மத்தியில் தங்கள் மதவெறி நஞ்சை ஊற்றிக் கொண்டிருப்பதற்கு எதிராக நாம் விழிப்பு டன் இருந்து மக்களைக் காப்பாற்றிட வேண்டும் என்றும் கூறினார்.

புதிய மாநிலக்குழு

மாநாட்டில் 50 உறுப்பினர்களைக் கொண்ட புதிய மாநிலக்குழு தேர்வு செய்யப் பட்டது. இப்புதிய மாநிலக்குழு, வி.சீனி வாசராவ் அவர்களை மாநில செயலாள ராகவும், 13 உறுப்பினர்கள் கொண்ட மாநில செயற்குழுவையும் தேர்வு செய்தது. ஐந்து உறுப்பினர் கொண்ட மாநில கட்டுப்பாட்டு ஆணையத்தையும் தேர்வு செய்தது. அதன் தலைவராக ஜல அஞ்சையா தேர்வு செய்யப்பட்டார். அகில இந்திய மாநாட்டு க்குப் பிரதிநிதிகளாக 23 பேரையும் மாநாடு தேர்வு செய்தது.

நிறைவுரை

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு நிறைவுரையாற்றுகையில் கட்சியின் வெகுஜனத் தளத்தை விரிவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி னார்.                (ந.நி.)