tamilnadu

img

நிலக்கரி எடுக்கும் பாஜக அரசின் முயற்சியை முறியடிப்போம்

சென்னை, ஏப்5- கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றா வது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலை யில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங் களை தஞ்சாவூர், அரியலூர், கடலூர் ஆகிய பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கு விவசாயி கள், அரசியல் கட்சித் தலைவர்கள்  என பல்வேறு தரப்பினர் கண்ட னக் குரல்களை எழுப்பி வரு கின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதன்கிழமை (ஏப்.5) நேரமில்லா நேரத்தில், டி.ஆர்.பி. ராஜா(திமுக), காம ராஜ் (அதிமுக), செல்வப்பெருந் தகை(காங்.), ஜி.கே.மணி (பாமக), சிந்தனைசெல்வன் (விசிக), நாகை மாலி(சிபிஎம்), மாரி முத்து (சிபிஐ). (பாஜக), ஜவா ஹிருல்லா, வேல்முருகன், ஈஸ்வ ரன், ஜெகன்மூர்த்தி, வைத்திய லிங்கம் உள்ளிட்டோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதன் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற  குழுத் தலைவர் நாகைமாலி, “தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் டெல்டா மாவட்டங்களிலுள்ள தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் வடச்சேரி, மைக்கல்பட்டி, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு ஆகிய  பகுதிகளில நிலக்கரி எடுப்பதற்கு ஒன்றிய அரசு ஒப்பந்தம் கோரி யுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் இந்த அறிவிப்பு டெல்டா மாவட்ட விவசாயத்தை முற்றிலும் அழித்து விடும். மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும்”என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,“ ஒன்றிய அரசின் இத்திட்டத்தால் மாநிலம் முழுவதுமுள்ள விவசாயி கள் மத்தியில் பதற்றம் அதிகரித் துள்ளது. இந்த பிரச்சனை குறித்து  முதலமைச்சர் பிரதமருக்கு உடனடியாக கடிதம் எழுதியிருக் கிறார். அதேபோல், ஒன்றிய அரசின் இந்த முடிவை காவிரி டெல்டா பகுதியை சேர்ந்த ஒட்டு மொத்த மக்களும் கண்டித்துள் ளனர். எனவே, முதலமைச்சர் அதில் தனிக் கவனம் செலுத்தி ஒன்றிய அரசின் திட்டத்தை முறி யடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பேசும்போது ,“நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைப்பது என்பது   டெல்டா மக்களின் வாழ்வாதா ரத்தை ஏலம் விடும் செயல். டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறி விக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அறிவிப்பு இந்த அறி விப்புக்கு புறம்பானது.  ஒன்றிய அரசின் நடவடிக்கையை அனு மதித் தால் டெல்டா மாவட்டங்க ளில் விவசாயம் அழிந்துபோகும்” என்றார். அதிமுக உறுப்பினர் காமராஜ் பேசுகையில், “நிலக்கரி எடுப்பது குறித்து ஒன்றிய அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளதை தடுத்து நிறுத்த வேண்டும்”என்றார். காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை, “நிலக்கரி சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்த மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒன்றியஅரசின் திட்டங்கள் மாநில அரசுக்கு எதிராக உள்ளது. மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் செய்வது கண்டனத்துக் குரியது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் புதிய திட்டம் செயல்படுத்தக்கூடாது” என்றார். தமிழ்நாடு அரசின் ஒப்புதலை பெறாமலும், அனுமதி கேட்காம லும் ஒன்றிய பாஜக அரசு சர்வதிகாரத்துடன் நடந்து கொள்வதை ஒருபோதும் அனு மதிக்க முடியாது என்று வேல் முருகன் (தமிழக வாழ்வுரிமை )  ஈஸ்வரன் (கெ.க.தே.க) பல்வேறு  கட்சி உறுப்பினர்கள்  தெரிவித்த னர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

விவாதத்திற்கு பதில் அளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு  அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்பதை ஒன்றிய அரசின் கவனத் திற்கு கொண்டு சென்றுள்ளதாக கூறினார். “டெல்டாவில் நிலக்கரி சுரங்க  ஏல விவகாரத்தில் முதல்வர் வேகமாக செயல்பட்டு, உடனடி யாக பிரதமருக்கு கடிதம் எழுதி யுள்ளார். நிலக்கரி அமைச்சகத் திடம் வலியுறுத்திய அதிகாரிகளும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என கூறி யுள்ளதாகவும் அமைச்சர் தெரி வித்தார்.