சென்னை, மார்ச் 4 - இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்ட மைப்பு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அமைப்பின் தலைவர் ஜி.செலஸ்டின், செயல் தலைவர் எம்.கருணாமூர்த்தி, பொதுச் செயலாளர் எஸ்.அந்தோணி, பொருளாளர் எஸ்.ஜெய சங்கரன் ஆகியோர் கூட்டாக முதலமைச் சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது: இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வது, கொடுமை படுத்துவது, சிறையிலடைப்பது, நாட்டுப்ப டகுகள், விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக உள்ளது. பிப்.14 அன்று நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் கிராமத்திலிருந்து சிவா என்ப வருக்கு சொந்தமான படகில் 8 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
24ந் தேதி திரும்பும் போது 9 மீனவர்களும் இலங்கை கடற்படை யால் தாக்கி விசைப்படகை பறிமுதல் செய்து ள்ளனர். மீனவர்களை சிறையிலடைத்து துன்புறுத்தி வருகின்றனர். அதேநாளில், புதுச்சேரி காரைக்கால் மாவட்டம் ரேணுகா தேவி அம்மன் என்ற விசை ப்படகையும், 13 மீனவர்களையும் இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிப்.26 அன்று ராமநாத புரம் நம்புதாளை கிராமத்தை சார்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாட்டு படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் அத்து மீறலால், சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினரும், தமிழக மீனவர்களும் மிகப் பெரிய தொழில் நெருக்கடிக்கும், பாதிப்பு க்கும் உள்ளாகி வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும், சிறையில் உள்ள மீனவர்க ளையும், படகுகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒன்றிய அரசுக்கு கடும் நிர்பந்தங்கள் கொடு த்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.