tamilnadu

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விரைவில் குணமடைய விழைகிறோம் : கே.பாலகிருஷ்ணன்

சென்னை,ஜன.30- மதிமுக பொதுச் செய லாளர் வைகோ விரைவில் குண மடைய விழைகிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள் ளார்.  இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: மதிமுக பொதுச் செயலாள ரும், மாநிலங்களவை உறுப் பினருமான வைகோ அவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அண்ணா நகரில் அவரது இல்லத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார் என்பதையறிந்து அவரது மகனும், மதிமுக தலைமைக் கழக செயலாளருமான துரை வைகோ அவர்களை தொடர்பு கொண்டு வைகோ அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தேன். வைகோ அவர்கள் நலமடைந்து வருவ தாகவும், விரைவில் பூரண குண மடைந்து வழக்கமான பணிக்கு வருவார் எனவும் தெரிவித்தார். விரைவில் அவர் முழுமையாக குணமடைய வேண்டுமென என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள் ளார்.