தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி துவங்கியபோது சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் ஒருபகுதியாய், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதற்காக டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தை துவக்கு வது என முடிவெடுக்கப்பட்டது. அதன் முதல் மையமாக கோவை கோட்ட அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முயற்சியால் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று துவங்கிய பயணம் 13 ஆண்டுகளை நிறைவு செய்து 14 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இதுவரை நம் மையத்தில் பயின்று முதல் நிலை தேர்வுகளில் ஆயிரத்திற்கும் மேற் பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றி ருக்கின்றனர். அதில், 368 மாணவ, மாணவிகள் பல்வேறு அரசுத்துறைகளில், பொதுத்துறை வங்கிகளில், இன்சூரன்ஸ் துறை யில், இதர பொதுத்துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்தச் சாதனைகளை எட்ட அல்லும் பகலும் உழைத்த நமது ஆசிரியர் பெருமக்களுக்கும், மை யத்தில் செலவினங்களை முழுமை யாக ஏற்றுக்கொண்ட நமது கோவை கோட்ட அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கும், உறுதுணை யாக இந்த பணியில் நம்மோடு பய ணித்த இந்திய வங்கி ஊழியர் சம் மேளனத்திற்கும் மையப்பணிகளில் ஈடுபடுத்திக்கொண்ட நம்முடைய தோழர்களின் பங்கேற்பும் பாராட்டப் பட வேண்டியவை.
கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகான மூன்று ஆண்டுகளில் கோவை மையத்தில் பயின்ற மாணவ, மாணவிகள் 319 பேர் வங்கி மற்றும் இதர அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் முதல் நிலை தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதில், 57 பேர் வெற்றி பெற்று இறுதி தேர்வில் கலந்து கொண்டுள்ளனர். இறுதித்தேர்வில் வெற்றி பெற்ற வர்களின் அதிகாரிகளுக்கான நேர்முகத்தேர்வில் 38 பேர் கலந்து கொண்டனர். அதில், 9பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர். மேலும், 20 பேர் உதவியாளர்களாக பணி நிய மனம் பெற்றுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்க நிகழ்வாகும். மையத்தில் பார்வை குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவர் வங்கி உத வியாளராக தேர்வு பணி நியமனம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கதாகும். கொரோனா பெருந்தொற்று பின்னணியில் வர்த்தக ரீதியாக இயங்கும் கல்வி நிலையங்களே மூடப்பட்ட சூழலில் நமது கோவை மையம் இணைய வழியில் தொடர்ச்சி யாக வகுப்புகளை நடத்தியது வெற்றி க்கு அடித்தளமாய் அமைந்தது. 2010இல் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளோடு மையம் துவங்கியது. தேர்வு முடிவுகள் வெளிவர தாமதமாகிய பின்னணியில் வங்கி மற்றும் இதர மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு பயிற்சியை துவக்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வந்தபோது நமது மையத்திலிருந்து 12 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இன்றைக்கு அவர்கள் பல்வேறு பதவி உயர்வுகளை பெற்று வரு வாய் ஆய்வாளர், வட்டாட்சியர் போன்ற உயர்பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர்.
நம் மையத்தில் பயின்ற மாணவ- மாணவியர் சமூகத்திற்கு பணியாற்று கிற சிறந்த ஊழியர்களாக திகழ்வது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எல்ஐசி ஊழியர் ஒருவர் அரசுத்து றையில் சேவைக்காக சென்றபோது அவரது பணியை விரைவாக முடித்து கொடுத்த அந்த ஊழியருக்கு நன்றி தெரிவிக்கையில், இது என்னுடைய கடமை. இதற்கு எதற்கு நன்றி. நீங்கள் எல்ஐசி ஊழியர்தானே என கேட்டு, உங்களது சங்கம் நடத்திய டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் மாண வன்தான் நான். நீங்கள் கற்றுக்கொ டுத்ததை நான் செயல்படுத்துகிறேன் என்று பெருமையோடு தெரிவித்துள்ளார். வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றும் மற்றொரு மாணவர் குடியரசு தின விழாவின்போது மாவட்ட ஆட்சியரிடம் மிக நேர்மை யான அதிகாரி என்ற பாராட்டு சான்றி தழை பெற்ற நிகழ்வு மறக்க இயலாது. இதுபோன்ற எண்ணற்ற பதிவுகளை நம்மால் சொல்ல முடியும். வங்கி தேர்வு வகுப்பில் வெற்றி பெற்று கூட்டுறவு வங்கியில் பணியில் சேர்ந்த மாணவி தனது அனுப வத்தை பகிர்கிறபோது நான் கணக்குப் பாடத்தில் பலவீனமானவள், எனக்கு கணக்கு வராது. ஆனால் தேர்வில் கணக்கு பாடத்தில் கூடுதலாக மதிப் பெண் பெற்று பணி நியமனம் பெற் றேன் என்று மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.
சிறு காத்திருப்பு பலன் பெரிது
ஒரு நாள் நமது மையத்திற்கு மாணவனின் தாயார் வந்திருந்தார். நான் வருமானம் ஈட்டித்தான் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. மகனுக்கு அரசாங்க வேலை எல்லாம் வேண்டாம். ஏதாவது ஒரு தனியாரிடம் வேலை பார்த்து மாதம் 7 ஆயிரம் கொடுத்தால் போதும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி னார். நமது மையத்தை சேர்ந்த ஒரு வர் அந்த தாயை சமாதானம் செய்து மூன்று மாதங்கள் பொருத்திருங்கள் என்றோம். அடுத்த மாதமே அவர் கனரா வங்கியில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார். இன்று அவர் பதவி உயர்வு பெற்று அதிகாரியாக பணியாற்றுகிறார். அவரின் குடும்பத் தில் நடந்த மாற்றங்கள்அளப்பரியது. இதேபோல் மற்றொரு மாணவி யின் தாயார் தனது மகனின் மேற் படிப்பிற்கு செலவு செய்ய வேண்டியது உள்ளதால் ஹாஸ்டலை காலி செய்து விட்டு மகளை ஊருக்கு அழைத்துச் செல்வதாகச் சொன் னார். அந்த மாணவி ஈரோட்டில் இருந்து கோவை வந்து தங்கி நம் மையத்தில் படித்து வந்தார். நாம் அவரது தாயாரிடம் ஆறு மாத காலம் காத்திருக்கச் சொன்னோம். இன்று அவர் எல்ஐசியில் வளர்ச்சி அதிகாரி யாக மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
இதேபோன்று வெளியூரில் இருந்து வந்து கோவையில் தங்கி படித்த மற்றொரு மாணவனின் கதை சுவாரஸ்யமானது. தனது படிப்புச் செலவுக்காக ரேபிடோ என்ற பைக் டாக்சியை அவர் பகுதி நேர மாக ஓட்டிக் கொண்டிருந்தார். வாடிக்கையாளரை ஏற்றுவதற்கு கோவை ரயில்நிலையம் முன்பு அருகில் உள்ள ஸ்டேட் வங்கி கட்டிடம் முன்பு காத்திருந்தார். அந்த நேரத்தை பயன்படுத்தி படித்துக் கொண்டிருந்தவர் இன்று அதே ஸ்டேட் வங்கியில் வேலைக்கு தேர் வாகி பணியாற்றுவதை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டார்.
மனிதநேயத்தைக் கற்றுக்கொள்கிறோம்
தமிழ்நாடு கிராம வங்கியில் அதிகாரியாக பணியாற்றும் நமது பயிற்சி மையத்தில் பயின்ற ஒரு மாணவி கூறும்போது, நாம் அம்பேத்கர் மையத்தின் வகுப்பு களில் சாதி, மத, இன வேறுபாடுகளை தாண்டி ஒற்றுமையோடு மனித நேயத்தை கற்றுக்கொள்கிறோம். தினமும் ஒன்றாக உணவருந்தி, சேர்ந்து படித்து, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து அனைவரும் வேலை பெற்றதை பெருமையோடு பார்க்கிறேன் என பதிவு செய்தார். ஆம் நமது அம்பேத்கர் மையம் மாணவர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு பெற்றுத்தருகிற அதே நேரத்தில் சமூகத்திற்காக அவர்கள் கடமையை செய்ய வலியுறுத்துவ தோடு மதமாச்சர்யங்களை களை ந்து உண்மையோடு ஒற்றுமையோடு கம்பீரமாக வாழ சமூகக் கல்வி கற்றுத்தரும் மையமாக இருப்பது மிகச் சிறப்பு. கோவையில் செயல்படும் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையம் புதிய சிக ரங்களை எட்டட்டும். தமிழகத்தின் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தரும் மிகச்சிறந்த மைய மாக கோவை மையம் திகழட்டும்.
- வெ.சுரேஷ்,
ஒருங்கிணைப்பாளர்,
டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம், கோவை