நரேந்திர சிங் தோமர் மிரட்டல்
புதுதில்லி, டிச.25- பிரதமர் மோடியால் விலக்கிக் கொள்ளப்பட்ட புதிய வேளாண் சட் டங்கள் மீண்டும் கொண்டுவரப்பட லாம் என்ற ரீதியில் ஒன்றிய அரசின் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் நடை பெற்ற தனியார் முதலீட்டு மாநாட்டில் நரேந்திர சிங் தோமர் பங்கேற்றுப் பேசி யுள்ளார். அப்போது, “விவசாயத் திருத்தச் சட்டங்களை நாங்கள் கொண்டு வந் தோம். சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டு களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஒரு பெரிய சீர்திருத்தம் கொண்டு வந்தோம். ஆனால், சிலருக்கு இது பிடிக்கவில்லை. ஆனால், இதைக் கண்டு அரசு ஏமாற்ற மடையவில்லை. இப்போது ஒரு படி தான் பின்வாங்கியுள்ளோம். ஆனால் விவசாயிகள் தான் இந்தியாவின் முது கெலும்பு என்பதால் கண்டிப்பாக மீண் டும் முன்னோக்கிச் செல்வோம்” என்று தோமர் பேசியுள்ளார். இது விவசாயிகள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச தேர்தலைக் கருத்தில் கொண்டே மோடி அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுள்ளது. தேர்தல் முடிந் ததும் இந்த சட்டங்களை மீண்டும் கொண்டுவர வாய்ப்பு உள்ளது என்று எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே சந்தேகம் கிளப்பி இருந்தன என்பது குறிப்பி டத்தக்கது.