சென்னை, டிச. 10 - நம்மிடம் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறோமோ, அதுபோல நாம் மற்றவர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே மனித உரிமையின் அடிப்படைத் தத்துவம் என மு.க.ஸ்டா லின் கூறியுள்ளார். “உலக மனித உரிமைகள் நாளை” முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாதி, மதம், இனம், நிறம், பாலினம் மற்றும் பிறப்பு அடிப்படையிலான எந்த வித பாகுபாடுமின்றி அனைத்து மக்க ளுக்குமான அடிப்படை உரிமைகளும் அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே மனித உரிமைத் தத்துவமாகும்.
1948ஆம் ஆண்டு மனித உரிமை களுக்கான உலகளாவிய பிரகட னத்தை ஐக்கிய நாடுகளின் பொது அவை ஏற்றுக்கொண்டதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் தேதி உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப் ்படுகிறது. நம்மிடம் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கி றோமோ, அதுபோல நாமும் மற்றவர்க ளிடமும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே மனித உரிமையின் அடிப் ்படைத் தத்துவமாகும். அந்த வகை யில் “அனைவரும் சமம்” என்பதை இந்த ஆண்டுக்கான மனித உரிமைகள் நாள் முழக்கமாக ஐ.நா. அவை அறிவித்துள்ளது.
இதைத்தான் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றும் “யாவரும் கேளிர்” என்றும் தமிழ் நிலம் தாங்கி நின்றது. இதைத்தான் ‘சுயமரியாதை’ எனும் பெயரில் இந்தத் தமிழ் மண் அரசியல் சமூக பண்பாட்டு தளத்தில் தொடர்ந்து வளர்த்து வந்துள்ளது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டிடவும், ஒவ்வொருவரின் சுயமரியாதையையும் பாதுகாத்திடவும் இந்த மனித உரிமைகள் நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.