காளையார்கோவில் அருகே குழாய்கள் உடைந்து 71 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிப்பு
சிவகங்கை,ஜூன் 8- குடிநீர் குழாய் உடைப்பால் சிவ கங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகாவில் 71 கிராமங்களுக்கு குடிநீர் விநி யோகம் பாதிக்கப்பட்டுள்ளது. காளையார்கோவில் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் 15 நாட்களாக 71 கிராமங்க ளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப் பட்டது. கோடையில் கிராம மக்கள் தண்ணீருக்காக சிரமப்படுகின்றனர். சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியத்தில் உள்ள பல கிரா மங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் முழுமை யாக காவிரி குடிநீரையே நம்பியுள்ளனர். இத்திட்டத்தில் இலந்தகரை நீரேற்று நிலையத்தில் இருந்து இலந்தகரை, வேளா ரேந்தல், மாரந்தை, சேதாம்பல், ஏரிவயல், மேலமருங்கூர், சிலுக்கப்பட்டி, உசி லங்குளம் உட்பட 71 கிராமங்களுக்கு குடி நீர் விநியோகிக்கப்படுகிறது. இலந்தகரை அருகே காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய்கள் பராமரிப்பின்றி ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால், கடந்த 15 நாட்களாக 71 கிரா மங்களுக்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. கோடையில் கொளுத்தும் வெயிலில் கிராம மக்கள் தண்ணீருக்காக அலைகின்றனர். பராமரிக்கப்படாத குழாய்கள் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காளையார் கோவில் ஒன்றிய செயலாளர் தென்னரசு மற்றும் இலந்த கரை கிராம மக்கள் கூறியதாவது: காவிரி குடிநீரைத்தான் முழுமையாக நம்பி யுள்ளோம். முறையாகப் பராமரிக்காததால் அடிக்கடி குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு விநியோகம் பாதிக்கப்படுகிறது. 15 நாட்களாக குடிநீர் வராததால் மிகுந்த சிரமமாக உள்ளது. ஒரு குடம் தண்ணீரை 15 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தி வரு கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.