tamilnadu

img

நிதி நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.2500 கோடி மானியம் வழங்கிடுக!

இராமநாதபுரம்,அக்.9-  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை நிதி நெருக்கடியில் இருந்து  மீட்டெடுக்க ரூ. 2500 கோடி மானியத்தை  தமிழக அரசு வழங்க வேண்டும் என்று  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழி யர் மாநில மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது.  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)வின் 11 ஆவது மாநில மாநாடு இராம நாதபுரம் பாரதிநகரில் தங்க மகா லில் தோழர் கே.வைத்தியநாதன் நினை வரங்கில் நடைபெற்றது. மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர். மாநிலத் தலைவ ராக ஏ. புருஷோத்தமன், பொதுச்செய லாளராக மா.ஆத்மநாதன், பொருளாள ராக பி.குணசேகரன், உதவித் தலை வர்களாக வி. அழகுமலை, ஆர்.மருதை, ராசு கே.செல்வம். சி.அய்யப்பன்,  வி.முருகன், ஆர்.சோனைக்கருப்பையா, பி.பாலாஜி, உதவிச் செயலாளர்களாக ஆர்.சரவணன், பி.சிவபெருமாள், எஸ். பெலிக்ஸ், ஆர்.அரவிந்த், எஸ்.சங்கர், எஸ்.சி.பிரகாசம், பி. பஞ்சாட்சரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார்.

அமைப்பின் மாவட்டச் செயலாளர் மலைராஜன் நன்றி கூறினார்.  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில்  காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் .தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை நிதி நெருக்கடி யில் இருந்து மீட்டெடுக்க ரூ. 2500 கோடி மானியம் தமிழக அரசு வழங்க வேண்டும். சுமார் 563 கூட்டுக் குடிநீர் திட்டங்களை உருவாக்கி பராமரித்து வரும் வாரியத்திற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள 3 சதவீத பஞ்சப்படியை உடனே வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும். ஓய்வுக் கால பலன்களை ஓய்வுபெறும் தேதியில் வழங்க வேண்டும். உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி  ஊதிய பின்  பாக்கி நிலுவைத் தொகை வழங்க வேண்டும். இராமநாதபுரம் மாவட்டத்தில் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பத்து வருட ங்களுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றி வரு கின்ற தொழிலாளர்களுக்கு தேர்தல் வாக்குறுதிப்படி நிரந்தரம் செய்ய வேண்டும். 

மூடப்பட்ட திட்டங்களின் ஊழியர்கள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு நீரை நன்னீராக்கும் திட்டத்தில் உத்திரகோசமங்கை, கிடாதிருக்கை, பனைக்குளம் உட்பட ஒன்பது குடிநீர் திட்டங்கள் 25 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வந்த நிலை யில் காவிரி கூட்டுக் குடிநீர் வந்தவுடன் மூடப்பட்டு விட்டதால் இதில் பணி யாற்றி வந்த 37 தொழிலாளர்கள் வேலை  இழந்துள்ளனர். தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய தீர்ப்பு வழங்கியும் நிர்வாகம் மேல் முறையீடு செய்துள்ள நிலையில் தீர்ப்பை அமல்படுத்தும் வரையில் மனிதாபிமான அடிப்படை யில் பணியாளர்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பணி வழங்க வேண்டும். நரிப்பையூர்  கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தில் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நிரந்தரம் செய்யப்பட்டு பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாறாத நிரந்தர ஊதியத்தை நீக்கி எல்லோருக்கும் நடைமுறையில் உள்ளபடி வழங்க வேண்டும்.வாரியத்தில் பத்து வருடங்களாக இளநிலை உதவியாளராக உள்ள நான்கு நபர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.