tamilnadu

img

குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மாநில மாநாடு துவங்கியது

இராமநாதபுரம்,அக்.8- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) 11 ஆவது மாநில மாநாடு அக்டோபர் 8 சனிக் கிழமையன்று இராமநாதபுரம் பாரதிநக ரில் தங்க மகாலில் தோழர் கே.வைத்திய நாதன் நினைவரங்கில் துவங்கியது. சங்கக்கொடியை ஏற்றிவைத்து, மாநாட் டிற்கு தலைமை வகித்து மத்திய அமைப் பின் மாநிலத் தலைவர் எம்.பாலகுமார் உரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செய லாளர் எம்.சிவாஜி வரவேற்றுப் பேசி னார். துணைப் பொதுச்செயலாளர் பி.குண சேகரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாநில உதவித்தலைவர் எம்.சந்தி ரன் மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார் .மத்திய அமைப்பின் பொ துச்செயலாளர் எம்.ஆத்மநாதன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் வி.அழகுமலை வரவு- செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.  ஞாயிறன்று மாலை வழிவிடு முருகன் கோவிலில் இருந்து பேரணி துவங்குகிறது. இராமநாதபுரம் அரண்மனை முன்பாக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.