சென்னை,பிப்.7- பணியில் இருக்கும் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்த அரசு போக்குவரத்து கழகம் தடைவித் திருக்கிறது. இதுகுறித்து வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்துவதாலும், நடத்து நர்கள் முன் இருக்கையில் அமர்ந்து உரை யாடுவதாலும் அதிக விபத்து ஏற்படுகிறது. ஓட்டுநர்கள் பணியின் போது சட்டையின் மேல் பாக்கெட்டில் செல்போன் வைத் திருக்கக் கூடாது. அதனை நடத்துநரிடம் ஒப்படைத்துவிட்டு பணி முடிவடைந்த பின்னர் பெற்றுக் கொள்ள வேண்டும். நடத்து நர் பகல் நேரங்களில் முன் இருக்கையில் அமராமல் பின்புறம் கடைசி இருக்கையில் அமர்ந்து இரண்டு படிகளையும் கண்காணிக்க வேண்டும். பணி நேரத்தில் ஓட்டுநர்கள் செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட் டுள்ளது.