tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மீனவர்களுக்கு எச்சரிக்கை\

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய, தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வீசக்கூடும் என்பதால், திங்கட்கிழமை இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மீன்வளத் துறையினர் அனுமதி வழங்கவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். பாம்பன் துறைமுகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மே 30 வரை கனமழை'

சென்னை: தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை செய்து வருகிறது. இந்நிலையில் வடக்கு வங்கக் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (மே 27)  காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இதனால் கோவை, நீலகிரி உட்பட தமிழ்நாட்டில் மே 30 ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இழப்பீடு வழங்க உத்தரவு

சென்னை: தரமற்ற உணவு விநியோகம் செய்ததால், உடல் நலக்குறைவு ஏற்பட்ட வாடிக்கையாளருக்கு ஜொ மோட்டோ நிறுவனம் மற்றும் உணவகம் இணைந்து ரூ.30  ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை  நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித் துள்ளது. தரமற்ற உணவு வழங்கிய அர்ஜுன் மம்மி டாடி ஆந்திரா மெஸ் உணவகம், ஜொமோட்டோ நிறுவனம் தனக்கு ரூ.2.5 லட்சம் வழங்க உத்தரவிட கோரி சென்னை  மடிப்பாக்கத்தை சேர்ந்த ஜெகபிரபு என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிபிசிஐடி-க்கு மாற்றம்

துரை: காளையார்கோவில் அருகே மாரந்தை ஊராட்சி மன்றத் தலைவர், அவரது குடும்பத்தினர் தாக்கப் பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொட ரப்பட்டது. 2021 உள்ளாட்சித் தேர்தலில் என்னிடம் தோல்வியடைந்த வரதராஜன், அவரது ஆதரவாளர்கள் என் மீது தாக்குதல் நடத்தியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுதாரர் சுமத்திய குற்றச்சாட்டுகளை கவ னத்தில் கொண்டு தீர்வு காண வேண்டிய நிலை உள்ளது. எனவே, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர் நீதி மன்ற கிளை ஆணையிட்டுள்ளது.

தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட நிர்வாக ரீதியான 9 மாவட்டங்களில் உள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனி பேரிடர் மேலாண்மை ஆணையம்

சென்னை: பேரிடர் காலங்களில் அனைத்து துறை களையும் ஒருங்கிணைத்து, பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய முயற்சியாக தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ளது. அதாவது, சென்னை மாநகராட்சி ஆணையர் தலை மையில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் அடங்கிய ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் மாநகராட்சி துணை ஆணை யர், மாநகராட்சி நல அலுவலர், சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரி, தலைமைப் பொறியாளர் ஆகியோர் இடம்  பெற்றுள்ளனர்.

தமிழ் புறக்கணிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவின் பேனர்களில், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே தகவல்  இடம்பெற்றுள்ளது. தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை உரு வாக்கியுள்ளது.

அருவிகளில் வெள்ளம்!

கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கோவை குற்றா லத்தில் காட்டாற்று வெள்ளம்  கரைபுரண்டு ஓடுகிறது. மழை நீடிக்கும் நிலையில், பொதுமக்களுக்கு விதிக்கப் பட்டுள்ள தடை சில நாட்களுக்கு  தொடரும் என எதிர்பார்க்கப்படு கிறது.

பொறியியல் படிப்புக்கு  2.43 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை, மே 26 - பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆர்வம் கடந் தாண்டை விட, நடப்பாண்டு மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். தமிழகத்தில் பொறியியல் படிப்பு களில் சேர்க்கை பெற ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்ற னர். அந்த வகையில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர இதுவரை  2.43 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியி யல் படிப்புக்கு இணைய வழியாக விண்ணப்பிக்க ஜூன் 6 ஆம் தேதி கடைசி நாள். பொறியியல் சேர்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள்  www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் ஜூன் 6 ஆம்  தேதி வரை விண்ணப்பிக்கலாம். தற்போது வரை 2.43 விண்ணப்பங்கள்  பெறப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க இன்னும் 12 நாட்கள் உள்ள நிலை யில், பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

சென்னை: தென் மேற்கு பருவக் காற்றின்  வேகம் அதிகரித்துள்ள தால், காற்றாலை மின்  உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத் தில் தமிழ்நாட்டில் காற் றாலை மின் உற்பத்தி 3,253 மெகாவாட் ஆக  அதிகரித்துள்ளது. ஞாயி றன்று தமிழ்நாட்டின் அதிக பட்ச மின் தேவை 13,905  மெகா வாட்டாக இருந்து உள்ளது

. ‘தமிழ் நிலம்’ செயலி

சென்னை: கிராமப் புற நில ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட பட்டா நகல்களை ‘தமிழ் நிலம்’ செயலி மூலம் எளிதாகப் பெறுவதற்கு, தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரி வித்துள்ளார்.

உயர் நீதிமன்ற கிளை கருத்து

மதுரை: கள்ளச்சாரா யம் போன்ற சட்டவிரோத மதுவால் ஏற்படும் உயிரி ழப்புகளை தடுக்கவே மதுபான விற்பனையில் அரசு ஈடுபட்டுள்ளது என  குறிப்பிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற மதுரை  கிளை, இந்த துறையில்  ஊழல்களை அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தி யுள்ளது. ஊழல் குற்றச் சாட்டில் கிடைக்கக் கூடிய  ஆவணங்களை பார்க்கும் போது மொத்த டாஸ்மாக்கி லும் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது என்று சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை தெரி வித்துள்ளது.

சுகாதாரத் துறை உத்தரவு

சென்னை: தென் மேற்கு பருவமழை தொ டங்கியுள்ள நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை 24 மணி நேரமும் மருத்துவ சேவை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடு களை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு தரமான குடிநீர் கிடைப்பதை உறுதி  செய்ய வேண்டும் என்